Monday, October 23, 2017

நானே போயிடுறேன் கண்ணீருடன்

என்னை விட உன் மேல பாசம்
வைக்க யாருமில்ல
இது வரை நீ போட்ட வேஷம்
எனக்கு தெரிய வில்லை

நான் இல்லை என்று விலகும்
போது படிய வச்ச
உன்னை தேடி நான் வந்தப்ப
ஓடி ஒளிந்து கிட்ட

அப்போவே இது உனக்கு தெரியலயா
உங்க அப்பா அம்மா விரும்ப மாட்டாங்கனு
புரியலயா

என் வழியில் நானும் அப்போ போய் இருப்பேன்
என் வாழ்க்கை இது என்று தானே
நினைத்திருப்பேன்

அப்போ என் வாழ்க்கையை நீயே
முடிவு செஞ்ச
இப்போ தள்ளி விட்டு போறியே நான்
என்ன செய்ய

தேன் தடவின பேச்சால என்னை
மயக்கி வச்ச
இப்போ தினம் தினம் கண்ணீரில
என்னை நீ நனைய வச்ச

நல்லாயிரு என்று சொல்ல நான்
தியாகி இல்ல
நாசமா நீ போயிடுனு சொல்ல நான்
பாவியும் இல்ல

பாகா