Monday, August 28, 2017

நெல்மணி

மண்ணில் புதைத்து வைத்தாலும்  
நானும் திமிறி எழுந்தேன் உங்களுக்காக 

நான் வளரும் பருவ காலம் பல 
இயற்கை மருந்துகளை கொடுத்து வளர்ந்தேன் 

இப்போது பல செயற்கை மருந்துகளை 
கொடுத்து என்னையும் மண்ணையும் கெடுத்தார்கள் 

எங்கள் பலன்கள் குறையத்துவங்கியதும் 
எங்களை குறை சொன்ன மனிதர்கள் 
இது அவர்களின் தவறு என்று உணரவில்லை 

எங்கள் பருவ காலம் முடிந்து 
அறுவடை காலத்தில் அறுவடை செய்வார்கள் 

எங்களை பிரித்தெடுத்து அடித்து 
சகோதர சகோதரிகளை தரம் பிரித்து வைப்பார்கள்

நாங்கள் பிறந்த வீட்டில் இருந்து 
புகுந்த வீட்டுக்கு செல்வதை போல் நாங்களும் 
தயாராவோம் 

நாங்கள் இவ்வளவு தூரம் கடந்து வந்து 
எங்களை சாப்பிடாமல் வீணடிப்பார்கள்

உங்கள் வீட்டில் நாங்கள் வந்தால் எங்களை 
வீணடிக்காமல் இயலாதவர்களுக்கு கொடுங்கள் 
இப்படிக்கு 
உங்கள் நெல்மணி 


பாகா   

No comments:

Post a Comment