Monday, September 11, 2017

நீரை வீணாக்காதீர்

நான் இன்றி இங்கு எந்த உயிருமில்லை
எனை காணாத எவரும் இவ்வுலகில்
இல்லை


நீர் தானே என்று நீ வீணாக்கினாய்
உன் எதிர்கால வாழ்க்கையை தெரிந்தே
பாழாக்கினாய்


மேகத்தில் இருந்து தான் பிறக்கும் நேரம்
உன் தாத்தாக்கள் என்ன செய்தார்கள்
அந்நேரம்


வீட்டு மாடத்தில் பாத்திரங்கள் திறந்து வைப்பர்
என்னை துளி கூட ஒதுக்காமல் நிரப்பி
உபயோகிப்பர்


நீ இன்று என்னை இப்படி கண்டதுண்டா
நான் சாக்கடையில் கலப்பதும் ஏன்
உனக்கு புரிவதுண்டா


எல்லாமே நீ செய்யும் தவறு மனிதா
உனை நீயே திருத்திக்கொள் உயர்வு
மனிதா

உன் தலைமுறைக்கு இருப்பதால் வீணடிக்கிறாய்
உன் எதிர்கால சந்ததியரின் வாழ்வை
சீரழிக்கிறாய்



பாகா

No comments:

Post a Comment