Monday, March 13, 2017

உன்னைக் காதல் செய்

புதிதாய் காணும் ஒவ்வொருவரும் 
இவள் என்னவள் என்று கண்கள் கூறும் 
ஆனால் மனது கண்கள் கூறுவதை 
நம்பி ஏமாறாதே எனக் கூறும் 

நான் கண்கள் கூறியவற்றை நினைத்து 
ஆனந்தப்பட்ட சில நாட்களில் 
மனது வென்று விடும் 

இனிமேல் கண்களை நம்புவதில்லை 
என் காதலி என்னிடம் வரும் வரை 
அந்த இடத்தில் யாரையும் வைத்து ஏமாற விரும்பவில்லை 

என்னை என் காதலியை விட 
விரும்பும் ஒரு உயிர் உலகத்தில் உள்ளது 
ஆம் தினமும் என்னை காதலிக்கும் 
அந்த உயிர் என்னை மிகவும் ரசிக்கும் 

ஆம் அது வேறு யாருமில்லை நான் தான் 
நம்மைத் தவிர வேறு யாரால் நம்மை 
மிகவும் நேசிக்க முடியும் 
நம்மை காதலித்தால் வாழ்வு இனிதாகும்....!


பாகா 

No comments:

Post a Comment