Monday, March 20, 2017

என்ன தவறு செய்தேன்

என் நிழல் போல் தொடர்ந்து வந்த நீ 
தீடிரென்று தோன்றி மறையும் மேகங்கள்
போல் ஏன் மறைந்தாய் 

என்னிடம் பேசிப் பேசிக் கழித்த நீ 
இன்று நீ உன் முகம் கூட 
காட்டாமல் எங்கு போனாய் 

உன்னை நண்பன் என்று நினைத்த 
என்னை;நீ வெறும் நபர் 
என்று நினைத்து விட்டாயோ 

தவறு ஏதும் செய்திருந்தால் 
உரிமையாய் சுட்டிக் காட்டு 
ஆனால் தள்ளி வைத்து என் மனதைக் 
குத்திக் காட்டாதே 

என்றும் உன்னுடன் ஒரு நல்ல 
நட்பை விரும்பினேன் 
ஆனால் நீயோ என்னை வெறும் 
குப்பை என்று நினைத்து விட்டாயோ.......!?


பாகா 



No comments:

Post a Comment