Monday, June 19, 2017

ஏன் இந்த உணர்வு

தோற்று தோற்று விழுகிறேன் 
இருந்தும் தோல்வி எனக்கு 
பழகவில்லை 

பயந்து பயந்து வாழ்கிறேன் தினமும் 
இருந்தும் பயம் எனக்கு 
பழக வில்லை 

என் மனம் எதையும் நாடவில்லை 
எனக்கு எதன் மேலும்
நாட்டம் இல்லை 

நெஞ்சிற்குள் நான் எதையும் 
நினைக்கவில்லை ஆனால்  சில 
நினைவுகள் என்னை விடுவதில்லை 

காயங்கள் எதுவும் பெற்றதில்லை 
ஆனால் வலியில்லா உணர்வு 
என்றும் எனக்கு இருந்ததில்லை 

வாழ்க்கையில் எதையும் தொலைக்கவில்லை 
ஆனால் என் கையில் 
எதுவுமே இல்லை 


பாகா   

No comments:

Post a Comment