Tuesday, June 27, 2017

தூக்கம் தொலைத்தேன்

விழிகளில் தூக்கம் வரவில்லை 
மனதினில் பாரம் ஒன்று 
இருப்பதினால் விழிகளில் தூக்கம் 
தூரம் விலகிப் போகிறது 

கண்களின் கண்ணீரை கைகளில் 
துடைப்பேன் 
மனதினில் கண்ணீரை எவ்வாறு 
துடைப்பேன் 

இமை என்ற கதவை கண்களுக்கு 
கொடுத்தான்  
மனதிற்கு கதவை கொடுக்க 
மறந்து விட்டான் இறைவன்!

பலநாள் தூக்கத்தை தொலைத்து 
விட்டேன் 
மனதின் குழப்பத்தால் என்னையே 
எனைத் தேடுகிறேன் 

கடவுள் என்னிடம் வரம் கேட்டால்  
மனதில் திரை எனும் ஒரு அணை 
போடாக கேட்டிடுவேன்..!


பாகா 

No comments:

Post a Comment