தனிமை என்ற இன்பத்தை நீ இன்பமாக
விரும்பினால் அது ஒரு போதை
மற்றவர்கள் உன்னை அந்த நிலைக்கு தள்ளினால்
அது உன் வாழ்க்கை வெற்றிக்கான பாதை
எல்லாருக்கும் நீ செய்வது தவறாகவே தெரியலாம்
உன் மனதை கேள் அது உண்மை சொல்லும்
கூடவே இருந்து நம் உழைப்பை உறிஞ்சு எடுக்கும்
ஒட்டுண்ணி தாவரமாக இல்லாமல் தனி ஒரு
மரமாக நிலைத்து நின்றாய்
பிறர் போல் நீயும் வாயில் வந்தவற்றை பேசாமல்
நல்லதையே பேசும் பொறுமை கொண்டாய்
பிறர் படும் துன்பத்தை நீ கண்டு துடித்தாய்
நீ படும் துன்பத்திற்கு யார் ஆறுதல் கூற
என்று தவித்தாய்
எது சரி தவறு என்பதை பட்டென சொன்னாய்
அம்பு போல் உன் உள்ளம் தைத்தவர்களை
உன் அன்பினாலே வென்றாய்
எவ்வளவு தான் கஷ்டம் வந்தும் உன் புன்னகையை
கொண்டு வென்றாய்
உனக்குள்ளும் உணர்வு உள்ளது என்பதை
கண்ணீரிலே சொன்னாய்
குழந்தை போல் நீ எல்லார் மனங்களையும் வென்றாய்
பல பொன்மொழிகள் எனக்குள் உண்டு நான்
குழந்தை இல்லை என்றாய்
அழகு என்றால் புற அழகை என்று சொல்லும் சில பேர்
இன்று உந்தன் மனஅழகை கண்டு வியந்து நின்றார்
ஓவியா என்று நீயும் உன் பெயரை சொன்னாய்
நம் வாழ்க்கை நாம் வரையும் ஓவியம் என்று எங்களுக்கு
சொன்னாய்.....!
பாகா