Monday, July 31, 2017

தனிமை ஓவியா

தனிமை என்ற இன்பத்தை நீ இன்பமாக 
விரும்பினால் அது ஒரு போதை 

மற்றவர்கள் உன்னை அந்த நிலைக்கு தள்ளினால் 
அது உன் வாழ்க்கை வெற்றிக்கான பாதை 

எல்லாருக்கும் நீ செய்வது தவறாகவே தெரியலாம் 
உன் மனதை கேள் அது உண்மை சொல்லும் 

கூடவே  இருந்து நம் உழைப்பை உறிஞ்சு எடுக்கும் 
ஒட்டுண்ணி தாவரமாக இல்லாமல்  தனி ஒரு 
மரமாக நிலைத்து நின்றாய் 

பிறர் போல் நீயும் வாயில்  வந்தவற்றை பேசாமல் 
நல்லதையே பேசும் பொறுமை கொண்டாய் 

பிறர் படும் துன்பத்தை நீ கண்டு துடித்தாய் 
நீ படும் துன்பத்திற்கு யார் ஆறுதல் கூற 
என்று தவித்தாய் 

எது சரி தவறு என்பதை பட்டென சொன்னாய் 
அம்பு போல் உன் உள்ளம் தைத்தவர்களை 
உன் அன்பினாலே வென்றாய் 

எவ்வளவு தான் கஷ்டம் வந்தும் உன் புன்னகையை 
கொண்டு வென்றாய் 

உனக்குள்ளும் உணர்வு உள்ளது என்பதை 
கண்ணீரிலே சொன்னாய் 

குழந்தை போல் நீ எல்லார் மனங்களையும் வென்றாய் 
பல பொன்மொழிகள் எனக்குள் உண்டு நான் 
குழந்தை இல்லை என்றாய் 

அழகு என்றால் புற அழகை என்று சொல்லும் சில பேர் 
இன்று உந்தன் மனஅழகை கண்டு வியந்து நின்றார் 


ஓவியா என்று நீயும் உன் பெயரை சொன்னாய் 
நம் வாழ்க்கை நாம் வரையும் ஓவியம் என்று எங்களுக்கு 
சொன்னாய்.....! 


 பாகா 

No comments:

Post a Comment