Monday, July 10, 2017

விவசாயியே கடவுள்

இவ்வுலகில் எனை படைத்ததற்கு 
கடவுளே என்னை மன்னித்து விடு 

இவ்வுலகில் அனைவரும் என்னை விரும்பும் 
வரம் கொடுத்ததற்கு கடவுளே என்னை 
மன்னித்து விடு 

ஜாதி மதம் என்று என்னை பாராமல் 
அனைவர்க்கும் கொடுத்ததற்கு கடவுளே 
என்னை மன்னித்து விடு 

உன்னை நீ பட்டினி போட்டு என்னை 
இவ்வுலகில் வளர்த்ததற்கு கடவுளே  
என்னை மன்னித்து விடு 

உன் கண்ணீரை நீராக்கி எனை 
ஊட்டி வளர்த்ததற்கு கடவுளே 
என்னை மன்னித்து விடு 

கடவுளுக்கு மரணம் கொடுத்த எங்களை 
மன்னித்து விடு கடவுளே மன்னித்து விடு 

பயிர்களாகிய எங்களை இவ்வுலகில் 
கொண்டு வந்த விவசாயிகளே நீங்கள் தான் 
எங்களுக்கு கடவுள் 

எவரும் உங்களை நினைக்கவில்லை 
என்று கவலை கொள்ளாதீர்கள் 
பயிர்களாகிய நாங்கள் இருக்கும் கடைசி 
மணித்துளி வரை உங்களை நினைத்திருப்போம் 
கண்ணீருடன்....?!

கடவுள் = விவசாயி 

பாகா 

No comments:

Post a Comment