Monday, March 27, 2017

பிரிந்து செல்வாயோ

என்று நான் உனைப் பார்த்தேனோ 
அன்று நீ என் மனதில் பதியவில்லை 

என்று உன்னுடன் பழகினேனோ 
அன்றே என் கண்களுக்குள் வந்து விட்டாய் 

உன் நகைச்சுவையான பேச்சில்
என்னை அறியாமல் மயங்கினேன் 

நீ என்னுடன் இருக்கும் ஒவ்வொரு நொடியும் 
இந்த உலகையே என் கைக்குள் கொண்ட 
சந்தோசத்தை உணர்ந்தேன் 

ஒரு நாள் உனை பார்க்காவிடில் 
இந்த உலகையே வெறுமையாய் 
நான் உணர்ந்தேன் 

பார்த்து பழகி என் மனதில் குடிவந்த 
நண்பனே உன்னை மிகவும் பிடிக்கும் 

பிடித்தவை எல்லாம் எனை விட்டு பிரிந்து போகும் 
வரம் எனக்கு நீயும் என்னை விட்டு 
பிரிந்து விடுவாயோ நண்பனே......!


பாகா    

2 comments:

  1. Atha varigal pidithavai elam enai vitu pogum neyum poiduviya yenra yekam enaku theryum athanal itha kavithai pidithathu

    ReplyDelete