Monday, April 24, 2017

பெண்ணின் சொல்லாத காதல்

கண்டுவிட்டேன் இன்று உன்னை 
என்னுள் என்னை நான் புதிதாய் 
கண்டேன் 

மிக அருகில் நீ இருந்தும் இத்தனை நாள் 
எங்கோ உனை தினம் தினம் 
தேடி அலைந்தேன் 

என்று என் வாழ்வில் நீ வந்தாயோ 
அன்று என்னையே நான் அழகாய் 
கண்டேன் 

எனக்குள் நீ துளித்துளியாய் கலந்து விட்டாய் 
உன்னைப் பிரிக்க இனி என்னாலும் 
எந்நாளும் முடியாது 

ஒரு வேளை நீ பிரிந்து போனாலும் 
என்னால் உன்னுடன் இருந்த நினைவுகளை 
அழிக்க முடியாது 

நண்பனாய் இருந்த நீ என் 
மனதுக்குள் எப்போது காதலை விதைத்தாய் 
நீ என்னுடன் என் வாழ்வில் வந்தால் 
என் வாழ்வு சிறக்கும் 

ஆனால் அது சாத்தியமில்லை 
உன்னைப் போன்று ஒருவனை நான் 
இனிமேல் காண்பேனா என்று தெரியவில்லை 

ஆனால் உன் வாழ்வில் நீ நினைத்ததை 
அடைய இறைவனை வேண்டுவேன் 
என் உயிர் மூச்சு நிற்கும் வரை.........

பாகா 

No comments:

Post a Comment