Tuesday, May 2, 2017

காதல் பயம்

இது சாத்தியமா என்று நினைக்கையிலே 
நம் மனதில் உள்ளதை கூறி விட்டோம் 

இரு உயிர்களாய் இருந்த நாம் 
ஓருயிர் ஆகி விட்டோம் 

நீ நான் என்று இருந்த நாம் 
நாம் என்று ஆகிவிட்டோம் 

பார்வையிலே என்னை சீண்டி விட்டாய் 
என் மனதை ஏனோ தூண்டி விட்டாய் 

சிரிப்பினில் என்னை கொன்று விட்டாய் 
அதில் தினம் தினம் எனை திணறடித்தாய்

குழந்தை போன்ற முகத்தை கொண்டு 
குழந்தை போல் எனை பாதுகாத்தாய் 

உன் மூச்சுக் காற்றில் உயிர் வாழ்கிறேன் 
நீ இல்லையேல் நான் ஏனோ வாடுகிறேன் 

வேண்டும் நீ எனக்கு என் வாழ்வில் 
உன் அரவணைப்பில் நான் இவ்வுலகில் 
வாழ வேண்டும் 

நம்பாத போது வராத பயம் 
நம்பும் இந்த நேரத்தில் ஏனோ 
ஒரு இனம் புரியாத பயம் 

வருவாயா என்னுடன் என் வாழ்நாள் முழுவதும் 
இல்லையேல் என் உயிர் மடியும் உன் மடியில்.....

பாகா  

No comments:

Post a Comment