Wednesday, January 18, 2017

கருவுற்ற தாயின் சந்தோசம்

என் செல்லமே 
உனை கருவில் சுமந்த போதே 
பல கற்பனைகளை சுமக்கிறேன் 

என் செல்லத்துக்கு 
தங்கத் தட்டில் சோறூட்டுவேன் 
வெள்ளிக் கிண்ணத்தில் பாலூட்டுவேன் 

மலடி என்ற சொல்லில் சிக்காமல் 
எனக்குத் தாய் என்ற பட்டத்தை 
கொடுத்த உனக்கு உன் உயிராய் 
என்றும் நான் இருப்பேன் 

நீ கொடுக்கும் கஷ்டங்களை 
இஷ்டமாக ஏற்றுக் கொண்டு 
உன் இஷ்டப்படி வளர்ப்பேன் 

உனை இவ்வுலகம் வியந்து 
பார்க்கும்படி பெரிய இடத்துக்கு 
கொண்டு வருவேன் என் செல்லமே 

என் வியர்வைத் துளிகளை 
உன் வாழ்வின் வெற்றிப் படிக்கட்டாக 
மாற்றுவேன்....!

பாகா  

No comments:

Post a Comment