Tuesday, January 24, 2017

குடிகார கணவன்

நான் உன்னை நம்பி 
உன் கைகளை பற்றிக் கொண்டு 
பல கனவுகளோடு கல்யாண 
வாழ்க்கையில் நுழைந்தேன் 

நீயும் என் கைகளை பிடித்து 
இழுக்கின்றாய் என்னை கொஞ்சுவதற்கு 
அல்ல என்னை அடித்து 
துன்புறுத்துவதற்கு 

நீ அடித்தாலும் தாங்கிக் 
கொள்கிறேன் ஆனால் நீ 
கூறும் சந்தேக வார்த்தைகள் 
எனை தினமும் கொல்கின்றன 

நான் உன் மனைவி பொறுத்துக்
கொள்வேன் நம் குழந்தைகள் 
பிற குழந்தைகளைப் பார்த்து 
பல கனவுகளுடன் வாழ்கின்றன 

ஏமாற்றி விடாதே அந்தப் பிஞ்சுகளை 
நீ திருந்தி விடுவாய் என்று 
பல முறை ஏமாந்தாலும் 
இன்னும் நம்பிக்கையுடன் இருக்கிறேன் 
நம் வாழ்வு சிறக்கும் என்று....!

பாகா 

No comments:

Post a Comment