Monday, January 30, 2017

வெளித்தோற்றம் நிலையற்றது

நீ தான் துணையென்று 
நான் உனை நம்பி வந்தேன் 
நீயோ என் மனதை பார்க்காமல் 
தோற்றத்தைக் கண்டு தள்ளி வைத்தாய் 
என் மனதில் கொள்ளி  வைத்தாய் 

வாழ்வதற்கு தேவை மனம் 
அழகு தோற்றம் அல்ல 
நீயோ அன்று என்னை விலக்கி வைத்தாய் 
என் தோற்றம் கண்டு 
இன்றோ உன் தோற்றம் 
அழகு போய்விட்டது நெருப்பில் வெந்து 
இன்றும் நான் உன்னை 
விரும்புகிறேன் உன் மனதை 

தோற்றம் அழகு நிரந்தரமல்ல 
அன்று உன்னிடம் இருந்த தோற்றம் 
இன்று இல்லை 
புரிந்து கொள்  மனமே சிறந்தது 
வெளியிலிருப்பவை நிலையற்றவை.....!

பாகா  

No comments:

Post a Comment