Friday, January 27, 2017

ஏன் என்னுள் இந்த மாற்றம்

தினம் தினம் வாழ்க்கையே கண்ணீரிலா 
தினம் தினம் அழுவதற்கே 
இந்த பிறவியா 

சந்தோச வாழ்க்கையே ஒரு கனவு தானா 
அன்றாடம் கவலைகளே தாக்கும் 
மாயம் ஏனோ 

என்னைச் சுற்றிலும் மனித இனங்கள் 
என்னைத் தொட்டுப் பார்க்க மட்டும் 
துடிக்கும் மனித இனங்கள் 

யார் என்னைப் பார்த்தாலும் 
கூசுகிறது 
அவர்கள் என்னைத் தாழ்த்திப் பேசுவது 
போலத் தோன்றுவது ஏனோ 

விலங்கினமாய் நான் பிறந்திருந்தால் 
காடுகளில் கூட்டத்தோடு நானும் வாழ்ந்திருப்பேன் 
பறவையாய் நானும் பிறந்திருந்தால் 
சுதந்திரமாய் நானும் பறந்திருப்பேன் 

மனிதனாய் என்னை ஏன் பிறக்க வைத்தாய் 
சில வித்தியாசத்தை ஏன் என்னுள் 
புகுத்தி விட்டாய்.....?!

பாகா  

No comments:

Post a Comment