Monday, May 15, 2017

துவண்டு விடாதே

வாய்ப்புகள் வரவில்லை என்று இருள் 
சூழ்ந்ததைப் போன்று எண்ணாமல் 
முயற்சி என்ற ஒளிவிளக்கை 
எப்போதும் உன்னிடம் வைத்துக் கொள் 

மரத்தைப் போன்று உடைந்து விடாதே 
தோல்வி என்ற காற்று உன்னைத் 
தாக்கும் பொழுது 
பசும்புல்லைப் போல் வளைந்து கொடுத்து 
வெற்றிகளைப் பிடித்துக் கொள் 

துன்பம் வரும் பொழுது கண்ணீர் விட்டு அழு 
ஒரு மெழுகுவர்த்தியைப் போல் 
மெழுகு போல் உன் உழைப்பை உருக்கி 
வெளிச்சம் என்ற இன்பத்தை உன்னை 
நம்பியிருப்பவருக்கு கொடு 

உன்னை நம்பு உன்னை நம்பியிருப்பவர்களை 
நம்பு நம்பிக்கையாய் வாழு.....!

பாகா 

No comments:

Post a Comment