Monday, May 8, 2017

நேர்மறை எண்ணம்

பிரச்சனைகளே வாழ்வாய் 
இருந்த எனக்கு சந்தோசம் 
எனும் தீர்வாய் வந்தாய் 

பயந்து பயந்து வாழ்ந்த 
என்னை தைரியமாக 
வாழ வைத்தாய் 

எதிர்காலத்தை பயந்து பார்த்த 
என்னை நிகழ்காலத்தை 
நினைத்து சந்தோசம் கொள்ள வைத்தாய் 

கெட்டதே நடக்கும் என்று நினைக்கும் 
என் மனதை நல்லதே நினை 
என்று நினைக்க வைத்தாய் 

இறுதி வரை நீ என்னுடன் வரவேண்டும் 
என் உயிர் இறக்கும் வரை நீ 
என்னுடன் வர வேண்டும் 

நல்லதையே நினைக்க வைத்த நீ 
என்னுடன் இறுதி வரை வருவாய் 
என்றே எண்ணத் தோன்றுகிறது...! 

பாகா 

5 comments:

  1. Enaku itha kavithaya konjam vilakama Sola mudyuma

    ReplyDelete
    Replies
    1. நேர்மறை எண்ணத்தை (positive thoughts) என்னுள் விதைத்தவர்

      Delete