Monday, May 22, 2017

நீ என் பேரழகு

காற்றடித்து பூவில் இருந்து இதழ்கள் பிரிந்து 
விழும் அழகை விட 

அன்பே நீ இதழ் சுளித்து என்மேல் காட்டும் 
கோபம் மிக அழகு 

மலையில் மறைந்து மறைந்து செல்லும் 
மேகக்கூட்டங்களின் அழகை விட 

அன்பே என் மனதில் வந்து வந்து போகும் 
உன் முகம் மிக அழகு 

திடீரென வந்து எனை நனைக்கும் மழையின் 
அழகை விட 

நீ தரும் நொடிப்பொழுது முத்தமழையில் 
நனைந்திடுவது மிக அழகு 

என் நிழல் போல் நீ என்னை தொடர்ந்து வருவதே 
என் வாழ்வில் நான் செய்த பேரழகு 

பாகா 

No comments:

Post a Comment