Monday, December 12, 2016

காதலை ஏற்காமல்

உன் கண்களுக்கு மை  பூசினாய் 
உன் வார்த்தைகளில் பொய் பேசினாய் 

உன் உதடுகளில் சாயம் தீட்டினாய் 
உன் நினைவுகளால் என்னை மாயமாக்கினாய் 

உன் புருவங்களை அழகாக்கினாய் 
உன் உருவங்களை எனது கனவாக்கினாய் 

முகத்துக்கு பவுடர் பூசினாய் 
அதில் என்னை தவிடுபொடியாக்கினாய் 

உதடுகளில் சிரிப்பை வைத்தாய் 
அதில் என்னை அள்ளி சுருட்டி வைத்தாய் 

செய்வதை எல்லாம் செய்துவிட்டு 
ஏன் என் காதலை ஏற்காமல் 
என்னை பாழாக்கினாய்...!

பாகா 

No comments:

Post a Comment