Wednesday, December 28, 2016

நண்பனின் மரணம்

எங்கோ பிறந்து 
எந்த உறவும் இல்லாமல் 
நண்பன் என்ற உறவுடன் என்னிடம் வந்தாய் 

நான் உன்னுடன் சேர்ந்து படிக்கவில்லை 
உன்னிடம் அதிக நேரம் நான் செலவிடவில்லை 
ஆனால் சிறிது நாட்கள்  பழகினாலும் 
நான் உன்னை நல்ல நண்பனாக பார்த்தேன் 

நீ என்னவெல்லாம் ஆசைகளோடு 
இருந்தாயோ எனக்குத் தெரியவில்லை 
ஆனால் என்னுடைய ஆசை நீ 
மறுப்பிறவியிலும் எங்கள் நண்பனாக 
வர வேண்டும் 

மரணமே உன்னிடம் ஒரு கேள்வி 
கேட்க விரும்புகிறேன் 
இளமையில் வறுமை மிகவும் கொடியது 
என்று ஔவையார் பாடினார் 

வறுமையே கொடியது என்றபோது 
இளமைப் பருவம் கூட முற்றுப் பெறாத 
என் நண்பனைக் கொண்டு சென்றாயே 
மரணமே இது நியாயமா உன்னை சபிக்கின்றேன்!!!!!!!

பாகா  

No comments:

Post a Comment