கடவுளுக்கு என் மேல் எவ்வளவு பாசம்
அதனால் தான் அள்ளி அள்ளி
சோகங்களை கொடுக்கின்றான்
அவனுக்கு என் மேல் எவ்வளவு கருணை
அதனால் தான் நிரம்பி வழியுமாறு
தோல்விகளை கொடுக்கின்றான்
அவனுக்கு என் மேல் எவ்வளவு காதல்
அதனால் தான் இரவில் என்னை
தூங்க விடாது செய்கிறான்
அவனுக்கு என் மேல் எவ்வளவு அன்பு
அதனால் தான் எனக்கு நிறைய
கண்ணீரை கொடுக்கின்றான்
அவனுக்கு என் மேல் எவ்வளவு மோகம்
அதனால் தான் என்னை இவ்வுலகிற்கு
கொண்டு வந்து உயர விடாமல்
பல துயரங்களை கொடுக்கிறான்.....!!!
பாகா
No comments:
Post a Comment