Sunday, December 4, 2016

தனலட்சுமி

தினம் தினம் தந்தாய் தரிசனம்
நீ இல்லையேல் எங்களுக்கு ஏது கரிசனம்

பணம் என்று சொன்னால் உறவுகள் கூடி வரும்
மடியில் கனம் ஒன்று வந்தால் தூக்கமும் ஓடி விடும்

தனம் என்ற சொல்லை உன்னில் வைத்தாய்
தினம் துன்பம் என்ற சொல்லை என்னுள் வைத்தாய்

உன் கைகளில் இருந்து கொட்டும் பணம்
பலர் சொற்கள் எனை வந்து கொட்டும் ரணம்

தனலட்சுமி என்ற பெயரைக் கொண்டாய்
பசி பட்டினியில் இருந்து எனை என்று காப்பாய்

தனலட்சுமி தனலட்சுமி என்று உனை துதித்தேன்
பணம் மட்டும் கையில் இல்லை என்று எண்ணித் தவித்தேன்...!

பாகா 

No comments:

Post a Comment