Friday, February 3, 2017

வருவாயா

எங்கடா இருக்கிறாய்
என்று நீ இங்கே வருவாய்
எப்போது என்னுள் உன்னை கலப்பாய்

உனக்காக நானும் காத்திருக்கிறேன்
நீ என்று வருவாய் என
கண்கள் பூத்திருக்கிறேன்

வருடங்கள் பல கழிந்த பின்னும்
ஏன் இன்னும் என்னிடம் நீ
சேரவில்லை

தேசம் தாண்டி சென்றாயே
வேலைக்காகவா இல்லை
என்னை கள்ளக்காதலியாக்கும்
நிலைக்காகவா

நான் வேறு ஒருவருடன் சேர மாட்டேன்
நீ வராவிட்டால் நான் இவ்வுலகில்
வாழ மாட்டேன் என்று வருவாய் காதலா
என் கழுத்தில் மாலையிட வருவாயா
அல்ல என் மேல் மாலையிட வருவாயா .....!

பாகா 

No comments:

Post a Comment