Friday, February 17, 2017

கடவுளுக்கு ஒரு கடிதம்

மனித ஜென்மம் கொடுத்ததற்கு நன்றி 
சந்தோசமாய் கழிந்தது 
என் சிறுவயது 

உடன்பிறப்புகளுடன் மகிழ்ச்சியாய்  கழிந்தது 
என் பருவ வயது 

பல கனவுகளுடன் இருந்தேன் 
கல்யாண வயதில் 

அழகானவனை எதிர்பார்க்கவில்லை 
நல்ல குணமானவனை பார்த்திருந்தேன் 

வந்தவனோ நல்ல குடிமகன் 
பிடிக்காமல் திருமண வாழ்வில் நுழைந்தேன் 

கிடைத்ததை பிடிக்க பழகிக் கொண்டேன் 
அவனின் குடியோ முற்றியது 

சந்தேக நோயும் வந்துவிட்டது 
சொல்ல முடியாத துயரங்களை 
நான் அனுபவித்தேன் 

புத்தி முத்தி போய்  சேர்ந்தான் 
இந்த உலகை விட்டு 

நான் குழந்தைகள் தெருவில் நிற்கின்றோம் 
கண்ணீருடன் வேண்டுகிறேன் மனித 
பிறவியே வேண்டாம் இறைவா.........


பாகா  

No comments:

Post a Comment