நீ என்னைத் தொட்டதும்
பரவும் வாசனையை பிடிக்காதவர்
எவரும் இல்லை
நீ சிரிப்பதை யாரும் ரசித்ததில்லை
அழுவதை ரசிக்காதவர் எவரும் இல்லை
நீ வந்து என்னைத் தழுவும் போது
என் உடலில் சூடு பறந்து போகும்
நீ என்னை தீண்டியதன்
விளைவாய் நான் பெற்றேன்
பல பிள்ளைகளை
நம் பிள்ளைகளால் இவ்வுலகம்
தூய்மையான காற்றை சுவாசிக்கும்
என்மேல் உனக்கு காதல்
உன்மேல் எனக்கு காதல்
நம்மேல் அனைவருக்கும் காதல்
பாகா
பரவும் வாசனையை பிடிக்காதவர்
எவரும் இல்லை
நீ சிரிப்பதை யாரும் ரசித்ததில்லை
அழுவதை ரசிக்காதவர் எவரும் இல்லை
நீ வந்து என்னைத் தழுவும் போது
என் உடலில் சூடு பறந்து போகும்
நீ என்னை தீண்டியதன்
விளைவாய் நான் பெற்றேன்
பல பிள்ளைகளை
நம் பிள்ளைகளால் இவ்வுலகம்
தூய்மையான காற்றை சுவாசிக்கும்
என்மேல் உனக்கு காதல்
உன்மேல் எனக்கு காதல்
நம்மேல் அனைவருக்கும் காதல்
பாகா
No comments:
Post a Comment