Tuesday, February 21, 2017

மழை மேல் மண் கொண்ட காதல்

நீ என்னைத் தொட்டதும் 
பரவும் வாசனையை பிடிக்காதவர் 
எவரும் இல்லை 

நீ சிரிப்பதை யாரும் ரசித்ததில்லை 
அழுவதை ரசிக்காதவர் எவரும் இல்லை 

நீ வந்து என்னைத் தழுவும் போது 
என் உடலில் சூடு பறந்து போகும் 

நீ என்னை தீண்டியதன் 
விளைவாய் நான் பெற்றேன் 
பல பிள்ளைகளை 

நம் பிள்ளைகளால் இவ்வுலகம் 
தூய்மையான காற்றை சுவாசிக்கும் 

என்மேல் உனக்கு காதல் 
உன்மேல் எனக்கு காதல் 
நம்மேல் அனைவருக்கும் காதல் 

பாகா  

No comments:

Post a Comment