Friday, February 24, 2017

ஜெயலலிதா அம்மாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

தமிழ்நாட்டின் என்றென்றும் ராணி நீ தான் 
அரசியலில் உன்னை தவிர்த்து ஒன்றுமே இல்லை 
கம்பீரத்துக்கே உருவம் கொடுத்தாய் நீ 

எதிரிகள் கூட்டமாக நின்று எதிர்த்த போது 
தனியாக  நின்று  மக்கள் படையோடு சேர்ந்து 
அவர்களை திக்குமுக்காட செய்தாய் நீ 

எத்தனையோ போராட்டங்கள் 
ஒரு துளி கண்ணீரும் இல்லை உன் கண்களில் 
சிரிப்பினால் வென்றாய் ஒவ்வொரு போராட்டத்தையும் 

மரணம் என்ற எமன் நடத்திய போராட்டத்தில் மட்டுமே 
நீ போராடி இறைவனடி சேர்ந்தாய் நீ தோற்கவில்லை 
எங்கள் இதயங்களில் என்றுமே நீ வாழ்கின்றாய் 

பெற்ற அம்மாவிற்கு அடுத்து உன்னையே அனைவரும் 
அம்மா என்றழைத்தனர், நீ மறைந்தாலும் எங்கள் நெஞ்சில் 
உன் சிரித்த முகம் நீக்கமற நிறைந்து இருக்கிறது...!

இவ்வுலகம் இருக்கும் வரை உன் புகழ் என்றுமே நிலைத்து நிற்கும் 
மக்களின் ராணிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் 

பாகா  

No comments:

Post a Comment