Monday, October 31, 2016

கனவுடன் வாழ்க்கை

பல கனவுகளுடன்
கல்யாண வாழ்க்கையில்
நுழைந்தேன்

இன்றும் கனவுடன்
வாழ்கிறேன் 

எப்போது என் உயிர் 
பிரியும் என்று குடிகார கணவனுடன்...

பாகா

Sunday, October 30, 2016

காத்திரு

காத்திரு அன்பே காத்திரு
அரவணைக்கும் கைகளுக்காக காத்திரு

நீ கட்டித் தழுவும் இந்த தேகத்திற்கு 
காத்திரு

நீ சுவைக்கத் துடிக்கும் இந்த இதழ்களுக்கு 
காத்திரு

அந்த இனிய விழா நடந்தேறும் அன்பே 
காத்திரு

காலம் கனியும் அன்பே அதுவரை நீ
காத்திரு....

பாகா

Saturday, October 29, 2016

தித்தி்க்கும் தீபாவளி

சட சடவென பட்டாசுகள்
வெடிக்க
டம் டும் என  வெடிகள் காதுகளை
பிளக்க
வானத்தைக் கிழித்து வானவேடிக்கைகள் 
வெடித்துப் பூக்க
அனைவரின் வீட்டிலும் தீப ஒளி
ஏற்றி கொண்டாடுங்கள்
தித்திக்கும் தீபாவளியை

தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள் ... :)

பாகா

Friday, October 28, 2016

வெட்கம்

நீ தூரம் இருந்தால் 
அருகில் வர வேண்டி
துடிக்கிறேன்

அருகில் இருந்தால் எனை 
தீண்ட வேண்டி 
தவிக்கிறேன்

நீ தீண்ட வரும் போது
நான் மறுக்கிறேன்
அது ஏன் அன்பே....!

பாகா

Thursday, October 27, 2016

வெற்றி கதவு

காலையில் கண்களைத் 
திறக்கும் போது

இன்று வெற்றி எனும்
கதவைத் திறக்க வேண்டும்
என்ற எண்ணத்தை உண்டாக்கு.....

பாகா

Wednesday, October 26, 2016

தவறே இல்லை

சரி என்று வரும் வரை 
தப்புகள் தவறே இல்லை 

தெளிவு வரும் வரை
குழப்பங்கள் தவறே இல்லை

அழகு வரும் வரை 
பருக்கள் தவறே இல்லை 

உறவு வரும் வரை
தனிமைகள் தவறே இல்லை

சேர்க்கை வரும வரை
பிரிவுகள் தவறே இல்லை

பொறுப்பு வரும் வரை 
குறும்புகள் தவறே இல்லை 

காதல் வரும் வரை 
ஏமாற்றம் தவறே இல்லை

குடும்பம் வரும் வரை 
சுதந்திரம் தவறே இல்லை 

வாய்ப்புகள் வரும் வரை 
காத்திருப்பு தவறே இல்லை 

வெற்றி வரும் வரை 
தோல்விகள் தவறே இல்லை


பாகா....

Monday, October 24, 2016

பெண் கல்வி

நான் இவ்வுலகில் மலர்ந்தேன் 
என்னைப் பெற்றவர்கள் மனம் வாடியது 

உற்றார் உறவினர்கள் அவர்களை 
சாடியது 

எனக்கும் என்னுடன் பிறந்தவனுக்கும் அவர்கள் 
அன்பில் வேறுபாட்டை காட்டியது  

பள்ளிக்கு சென்ற என்னை அடுப்பூத 
வைத்தது 

வயது வந்த  பருவத்தில் எனக்கு கழுத்தில் 
 தாலி  ஏறியது 

விபரம் அறியா பருவத்தில் எனக்கு 
குழந்தைகள் பிறந்தது 

இது தான் திருமணம் என்று புரிவதற்குள் 
என் கணவன் குடித்து குடித்து 
என் தாலி அறுந்தது 

படிப்புமில்லா கணவனுமில்லாமல் என் 
வாழ்க்கை தெருவில் நின்றது 

கஷ்டப்பட்டு உழைத்தேன் என் பெண் குழந்தை 
சந்தோசமாக பள்ளிக்கு சென்றது.....

பாகா 


Saturday, October 22, 2016

பறக்குது மனசு

மெல்ல நான் பறந்தேன் 
லேசாக என்னை உணர்ந்தேன் 

மனதின் சுமை யாவும் 
மெழுகாக உருகக் கண்டேன் 

ஏன் இந்த மாற்றம் என்னுள் 
எனை  நானே கேட்கும் தருணம் 

திடீர் என்று எந்தன் நெஞ்சம் 
ஏன் இன்று இப்படி தஞ்சம் 

விடை புரியா கேள்விகள் இன்று 
என்னுள் புதைந்து கிடக்கிறதென்று 

எனக்குள்  நானே கேட்டுக் கொண்டேன் 
மனசுக்குள்  எனையே  பூட்டிக்  கொண்டேன்... 

பாகா 


Wednesday, October 19, 2016

என் பிரபஞ்சம்

எந்தன் சிறு  உலகத்தில் நீ நுழைந்தாய் 
 எனக்கு வேறு உலகம் காட்டினாய் 

தனிமை விரும்பியாய் இருந்த என்னை 
கை பிடித்து கூட்டிச்சென்று  உலகழகை காட்டினாய் 

வெறுமையான மனதில் மெல்ல மெல்ல 
முழுதாய் நீயே நிரம்பினாய் 

சிறுபிள்ளைத் தனமாக நடக்கும் போதும் 
உன் சிறு சிரிப்பினில் கொன்றாய் 

கோபப்பட்டுக்  குதிக்கும் போதும் 
உன் மௌனப் பார்வையில் வென்றாய் 

கங்காருவை போல என்னை உன் மடியில் 
வைத்து தாங்கினாய் 

உலகமே  இப்படித்தான் என்று காட்டிய 
என் பிரபஞ்சமே நீதான் அன்பே.....

பாகா   

Monday, October 17, 2016

கரை மீது கடல் கொண்ட காதல்

காதலர்களுக்கு நம் மீது காதல் 
எனக்கோ உன் மீது காதல் 

குழந்தைகள் நம்மைக் கண்டால் 
துள்ளி குதித்து விளையாடும் 

நான் உனைக் காண ஓடி வந்து 
தொட்டு விட்டு செல்கிறேன் 

நாம் ஆடும் விளையாட்டை 
அனைவரும் ரசிப்பர்  

விளையாட்டு வினையானால் 
அனைவரும் துடிப்பர் 

நாம் சேர்ந்து வாழ நினைத்தால் 
உலகம் அழியும் 

ஓடி வந்து தொட்டு செல்லும் 
இந்த காதல் விளையாட்டே போதும் 
எனக்கு.... 

பாகா 


Thursday, October 13, 2016

மனசு

பறக்க தவிக்குது மனசு 
எல்லாம் மறந்து பறக்க துடிக்குது மனசு 

லேசாய் உணர்கிறேன் என்னை 
மனதில் புதிதாய் ஒரு வித எண்ணம் 

அனைவரும் எனையே பார்க்க 
வெட்கித் தவிக்குது மனசு 

எனக்குள் மட்டுமா மாற்றம் இல்லை 
அன்பே உனக்குள்ளும் உண்டோ இந்த மாற்றம் 

கேள்வி கேட்டு கேட்டு குதிக்கும் இதயம் 
எனக்குள் எப்போது  வந்தது இந்த உதயம்.....

பாகா 

Wednesday, October 12, 2016

பிள்ளையார்



அழகுக் கடவுள் முருகனின் அண்ணனே
ஆணை முக கடவுளே
எலியை வாகனமாய் கொண்டவனே
எங்கள் வலிகளை போக்குபவனே

துதிக்கையை கொண்டவனே
உனை துதிப்போரை காப்பவனே
குழந்தைகளுக்கு பிடித்த கடவுளே
தொந்தி கணபதியே உன்னை வணங்குகின்றேன்.....

பாகா

Tuesday, October 11, 2016

மரம்

என்னை அனைவரும் அடித்தார்கள் நான் 
பொறுமையாகவே இருந்தேன் 

என் உடம்பில் கீறல்களை உண்டாக்கினார்கள் 
அமைதியாய்  இருந்தேன் 

என் மேல் கல் விட்டு எறிந்தார்கள் 
அப்போதும்  புன்னகையை சிந்தினேன் 

என் மேல் ஏன் இவ்வளவு கோபம் 
பலருக்கு 

என்னை வெட்டாதீர்கள் மாறாக என்ன வேணாலும் 
துன்புறுத்துங்கள் 

உங்கள் கோபம் தீர என்னை  மண்ணில் இட்டு புதையுங்கள் 
நான் துளிர்த்தெழுந்து உங்களுக்கு மட்டுமல்ல 
உங்கள் சந்ததியினருக்கும் உதவி செய்வேன் 

உலகை காப்பாற்ற என்னை மண்ணில் இட்டு புதையுங்கள் 
கண்ணீருடன் வேண்டுகிறேன்......


பாகா 

Monday, October 10, 2016

அப்பா

விபரம் அறியா பருவத்தில் எனக்கு 
எல்லாமும் நீ தான் 

மழலை தாண்டிய பருவத்தில் எனக்கு 
உலகமும் நீ தான் 

வயது வந்த பருவத்தில் எனக்கு 
நண்பனும் நீ தான் 

நமக்குள் சிறு இடைவெளி வரும் வயதிலும் 
எனக்கு  ஹீரோவே நீ தான் 

வேலை கிடைக்காத  நேரத்தில் எனக்குள் 
தன்னம்பிக்கையை தூண்டியது நீ தான் 

இதுவும் கடந்து போகும் பிரச்சனைகள் உடைந்து 
போகும் என்று உறுதுணையாய் நின்றதும் நீ தான் 

இதுவரை என் வாழ்நாளில் உங்களுக்கு எதுவும் 
செய்ததில்லை 

கடவுள் என்னிடம் வந்து வரம் கொடுத்தால் 
என் அப்பாவிற்கு நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் 
கொடுக்க கேட்டு கொள்வேன் .....

I Love You அப்பா 

பாகா 


Saturday, October 8, 2016

வெற்றி

வானம் உன் கையில் இல்லை
பூமி உன் கையில் இல்லை
உந்தன் வாழ்க்கை உந்தன் கையில் இருக்கின்றதே

தோல்வி அதை கொன்னுப் போடு
வெற்றி அதை நெஞ்சில் போடு
உலகம் உன் பெயர் சொல்லி நடை போடும்

அச்சங்கள் அது உன்னை கொல்லும்
வை நம்பிக்கை என்ற ஒரு சொல்லும்
நம்பிக்கை என்ற சொல் போதும்
அதுவே நம் வெற்றியின் முதல் படியாகும்...

பாகா

முயற்சி ஆரம்பம்

எல்லாருக்கும் வணக்கம் என் பெயர்  பா.காளிகுமார்   நான்  இங்கு எனது கவிதை என்ற பிதற்றல்களை பதிவிட       இருக்கின்றேன் நீங்கள் உங்கள் ஒய்வு 
நேரத்தில் இங்கு வந்து பார்த்து உங்கள் கருத்துக்களை  தெரிவிக்க விரும்புகின்றேன் இது என்னுடைய முதல் இணையதள பதிவு முயற்சி ஆதரவு  தெரிவியுங்கள் நன்றி.