Wednesday, October 19, 2016

என் பிரபஞ்சம்

எந்தன் சிறு  உலகத்தில் நீ நுழைந்தாய் 
 எனக்கு வேறு உலகம் காட்டினாய் 

தனிமை விரும்பியாய் இருந்த என்னை 
கை பிடித்து கூட்டிச்சென்று  உலகழகை காட்டினாய் 

வெறுமையான மனதில் மெல்ல மெல்ல 
முழுதாய் நீயே நிரம்பினாய் 

சிறுபிள்ளைத் தனமாக நடக்கும் போதும் 
உன் சிறு சிரிப்பினில் கொன்றாய் 

கோபப்பட்டுக்  குதிக்கும் போதும் 
உன் மௌனப் பார்வையில் வென்றாய் 

கங்காருவை போல என்னை உன் மடியில் 
வைத்து தாங்கினாய் 

உலகமே  இப்படித்தான் என்று காட்டிய 
என் பிரபஞ்சமே நீதான் அன்பே.....

பாகா   

No comments:

Post a Comment