Monday, October 17, 2016

கரை மீது கடல் கொண்ட காதல்

காதலர்களுக்கு நம் மீது காதல் 
எனக்கோ உன் மீது காதல் 

குழந்தைகள் நம்மைக் கண்டால் 
துள்ளி குதித்து விளையாடும் 

நான் உனைக் காண ஓடி வந்து 
தொட்டு விட்டு செல்கிறேன் 

நாம் ஆடும் விளையாட்டை 
அனைவரும் ரசிப்பர்  

விளையாட்டு வினையானால் 
அனைவரும் துடிப்பர் 

நாம் சேர்ந்து வாழ நினைத்தால் 
உலகம் அழியும் 

ஓடி வந்து தொட்டு செல்லும் 
இந்த காதல் விளையாட்டே போதும் 
எனக்கு.... 

பாகா 


No comments:

Post a Comment