விபரம் அறியா பருவத்தில் எனக்கு
எல்லாமும் நீ தான்
மழலை தாண்டிய பருவத்தில் எனக்கு
உலகமும் நீ தான்
வயது வந்த பருவத்தில் எனக்கு
நண்பனும் நீ தான்
நமக்குள் சிறு இடைவெளி வரும் வயதிலும்
எனக்கு ஹீரோவே நீ தான்
வேலை கிடைக்காத நேரத்தில் எனக்குள்
தன்னம்பிக்கையை தூண்டியது நீ தான்
இதுவும் கடந்து போகும் பிரச்சனைகள் உடைந்து
போகும் என்று உறுதுணையாய் நின்றதும் நீ தான்
இதுவரை என் வாழ்நாளில் உங்களுக்கு எதுவும்
செய்ததில்லை
கடவுள் என்னிடம் வந்து வரம் கொடுத்தால்
என் அப்பாவிற்கு நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும்
கொடுக்க கேட்டு கொள்வேன் .....
I Love You அப்பா
பாகா
No comments:
Post a Comment