Tuesday, October 11, 2016

மரம்

என்னை அனைவரும் அடித்தார்கள் நான் 
பொறுமையாகவே இருந்தேன் 

என் உடம்பில் கீறல்களை உண்டாக்கினார்கள் 
அமைதியாய்  இருந்தேன் 

என் மேல் கல் விட்டு எறிந்தார்கள் 
அப்போதும்  புன்னகையை சிந்தினேன் 

என் மேல் ஏன் இவ்வளவு கோபம் 
பலருக்கு 

என்னை வெட்டாதீர்கள் மாறாக என்ன வேணாலும் 
துன்புறுத்துங்கள் 

உங்கள் கோபம் தீர என்னை  மண்ணில் இட்டு புதையுங்கள் 
நான் துளிர்த்தெழுந்து உங்களுக்கு மட்டுமல்ல 
உங்கள் சந்ததியினருக்கும் உதவி செய்வேன் 

உலகை காப்பாற்ற என்னை மண்ணில் இட்டு புதையுங்கள் 
கண்ணீருடன் வேண்டுகிறேன்......


பாகா 

No comments:

Post a Comment