Monday, October 24, 2016

பெண் கல்வி

நான் இவ்வுலகில் மலர்ந்தேன் 
என்னைப் பெற்றவர்கள் மனம் வாடியது 

உற்றார் உறவினர்கள் அவர்களை 
சாடியது 

எனக்கும் என்னுடன் பிறந்தவனுக்கும் அவர்கள் 
அன்பில் வேறுபாட்டை காட்டியது  

பள்ளிக்கு சென்ற என்னை அடுப்பூத 
வைத்தது 

வயது வந்த  பருவத்தில் எனக்கு கழுத்தில் 
 தாலி  ஏறியது 

விபரம் அறியா பருவத்தில் எனக்கு 
குழந்தைகள் பிறந்தது 

இது தான் திருமணம் என்று புரிவதற்குள் 
என் கணவன் குடித்து குடித்து 
என் தாலி அறுந்தது 

படிப்புமில்லா கணவனுமில்லாமல் என் 
வாழ்க்கை தெருவில் நின்றது 

கஷ்டப்பட்டு உழைத்தேன் என் பெண் குழந்தை 
சந்தோசமாக பள்ளிக்கு சென்றது.....

பாகா 


No comments:

Post a Comment