Saturday, October 22, 2016

பறக்குது மனசு

மெல்ல நான் பறந்தேன் 
லேசாக என்னை உணர்ந்தேன் 

மனதின் சுமை யாவும் 
மெழுகாக உருகக் கண்டேன் 

ஏன் இந்த மாற்றம் என்னுள் 
எனை  நானே கேட்கும் தருணம் 

திடீர் என்று எந்தன் நெஞ்சம் 
ஏன் இன்று இப்படி தஞ்சம் 

விடை புரியா கேள்விகள் இன்று 
என்னுள் புதைந்து கிடக்கிறதென்று 

எனக்குள்  நானே கேட்டுக் கொண்டேன் 
மனசுக்குள்  எனையே  பூட்டிக்  கொண்டேன்... 

பாகா 


No comments:

Post a Comment