Wednesday, November 30, 2016

பயம்

பயமே ஏன் நீ என்னுள் வந்தாய் 
நான் வெறுத்தாலும் ஏன் பின் தொடர்ந்து 
வருகிறாய் !
அவ்வளவு காதலா என்மேல் உனக்கு 

எதற்கெடுத்தாலும் பயம் எல்லாமும் பயம் 
ஏன் எனக்கு பயம் 
எங்கே சென்றாலும் பயம் 
எங்கே நின்றாலும் பயம் 
ஏன் இந்த பயம் 

இந்த ஜென்மத்தில் வந்த பயமா 
இல்லை போன பிறவியில் இருந்து 
தொடரும் பயமா 
இல்லை வரப் போகும் பிறவியின் 
தொடக்கம் இந்த பயமா 

மனமே பயம் இல்லாத என்னை உருவாக்கு 
இல்லை இந்நிமிடமே என்னை இந்த 
மண்ணுக்கு இரையாக்கு......!

பாகா 

Monday, November 28, 2016

காதல் கொண்டாயோ

வேருக்கு மண்ணின் மேல் 
இருக்கும் பிணைப்பைப் பார்த்து
நீயும் என் கைகளைக் கொண்டு
உன்னை பிணைத்துக் கொண்டாயோ

மழைத்துளிகளுக்கு மண்ணின் மேல் 
உள்ள ஆசையால் வந்து நிலத்தை
அடைகின்றன அதைப் பார்த்து 
நீயும் என் மேல் உள்ள ஆசையால்
முத்த மழை பொழிந்தாயோ

காற்றுக்கு மரத்தின் மீது
கொண்ட விருப்பத்தால் இலைகளை 
கோதி விடுவது போல் நீயும்
என் மீது உள்ள விருப்பத்தால் 
என் கூந்தலை கோதி விடுகின்றாயோ 

வண்டிற்கு தேன் மீது உள்ள 
காதலைப் பார்த்து அன்பே
நீ என்னை காதல் செய்தாயோ.....

பாகா


Saturday, November 26, 2016

என் உயிர் அப்பா

எனது உடலுக்கு உயிர்
கொடுத்தாய் நீ

எனது சிறுவயதில் 
எனது ஆசைகளை நிறைவேற்றினாய் நீ

நான்  கேட்டதை அளவுக்கதிகமாக
வாங்கிக் கொடுத்தாய் நீ

உனக்கு துன்பம் வந்தாலும்
என்னை சந்தோசப்படுத்தினாய் நீ

கூலி வேலை செய்தாலும் 
என்னை ராஜாவாக வளர்த்தாய் நீ

எனக்கு ஒரு தோழனாக
நின்று வழிகாட்டினாய் நீ

துன்பங்களை இன்பமாக்கினாய்
தோல்விகளை  வெற்றியாக்கினாய்

இனிவரும் பிறவிகளிலும்
நீயே எனக்கு தந்தையாக வர வேண்டும்..

பாகா


Thursday, November 24, 2016

கொல்லும் அழகே

கருமையான புல்வெளி போன்று
உன் கூந்தல் 

அருவியின் அழகையே தோற்கடிக்கும் 
உன் நெற்றியில் வழியும் வியர்வை

அலை மேல் எழுந்து நிற்கும் 
உன் புருவங்கள்

துப்பாக்கித் தோட்டா போல் 
என் இதயத்தை துளைக்கும்
உன் கருவிழி பார்வை

கத்தியைப் போன்று கூர்மையாக
இருக்கும் உன் மூக்கு

மலரின் இதழ்களைப் போன்று
மிருதுவாக இருக்கும் உன் காது மடல்

தேனில் ஊறிய பலாச்சுளை போன்று
உன் இதழ்கள்
என்னைக் கொல்கின்றதே...

பாகா 

Tuesday, November 22, 2016

எப்போது வருவாய்

இவ்வுலகில் நான் உனக்காக வந்தேன்
உனக்காகவே வளர்கிறேன்
உனக்காகவே வாழ்கிறேன்

நீ என்று என் வாழ்வில் வருவாய்
எனைத் தேடி எப்போது வருவாய்
உன் உள்ளத்தை எப்போது தருவாய்

என் விரல்களோடு உன் விரல்கள் கோர்ப்பாயா
என் வெற்றி தோல்விகளில்
என்றும் துணையாக இருப்பாயா

என் வாழ்நாள் முழுவதும் என்னுடன்
இருப்பாயா
நாம் சேர்ந்து இவ்வுலகினில் வாழ்வோமா
இல்லை நான் மட்டும் வாழ்ந்து சாவேனா ....

பாகா 

Monday, November 21, 2016

நட்பு போதும்

நீ என்று என் வாழ்வில் வந்தாய் சகா 
எப்போது என் வாழ்வில் வந்தாய் சகா 

உனக்கும் எனக்கும் எந்த 
உறவுமில்லை 
ஆனால் இந்த உறவுக்கு பிரிவு 
என்றுமில்லை 

நட்பு இல்லாத இடமே இல்லை 
காதல் தோற்பது உண்டு 
நட்புக்கு தோல்வியே இல்லை 
காதலை வெறுப்பவர்கள் உண்டு 
நட்பை வெறுப்பவர்கள் எவருமில்லை 

நல்லவனாய் இரு 
நல்ல நண்பனாய் இரு 
உன் வாழ்க்கை சிறக்கும்....

பாகா  

Saturday, November 19, 2016

கேள்விக்குறி

ஏன் எந்தன் வாழ்வில் வந்தாய் 
ஏன் என்னை ஏமாற்றிச் சென்றாய் 

எதற்கு என்னிடம் பொய்கள் கூறினாய் 
எதற்கு அதை மெய் போல் கூறினாய் 

எப்படி என்னை ஏமாற்றினாய் 
எப்படி காதலித்து ஏமாற்றினாய் 

எங்கே இன்று நீ ஓடினாய் 
எங்கே எனை விட்டு ஓடினாய் 

என்ன கூறினாய் என்னிடத்தில் 
என்ன செய்கிறாய் இவ்வுலகத்தில் 

ஏன்? எதற்கு?எப்படி?எங்கே?
என்ன? என்று உன்னிடம் 
கேள்வி கேட்காததால் நான் 
இன்று நிற்கிறேன்  
கேள்விக்குறியாய் "?"

பாகா 

Friday, November 18, 2016

இதயம் பறித்தாய்

நீ என் வாழ்வில் வந்தாய் 
மனதில் காதலைத் தந்தாய் 

சந்தோசமாய் என்னைக் கண்டேன் 
அதில் நான் உன்னைக் கண்டேன் 

இத்தனை வருட கனவு நினைவாகும் 
என்று நினைத்தேன் 
அது நடக்கவில்லை என்றபோது 
மிகவும் தவித்தேன் 

நான் உனக்கு முதல் இடம் 
என்று நினைத்தேன் 
நீயோ இரண்டாம் இடத்திற்கு 
என்னை உதறினாய் 

வேண்டாம் என்று உனை எடுக்க 
முயன்றேன் முடியவில்லை 
இன்றோ நான் எடுத்து விட்டேன் 
என் இதயத்தையே 
இனி என் இதயம் எவரிடமும் 
காதல் கொள்ளாது.....

பாகா  

Thursday, November 17, 2016

காதலியாய்

ஏனடா என் காதலன் ஆனாய் 
எனை உயிரோடு கொல்லும் 
கொலைகாரனும்  ஆனாய் 

கனவுகள் பல தந்தவனே 
உன் நினைவுகளில் எனை 
புதைத்தவனே 

பல வேதனைகள் நான் 
தந்த பின்பும் ஏன் எனை நீ 
தொடர்ந்து வந்தாய் 

நண்பனாய் என்று இருந்தவனை 
ஏன் காதலனாய் எனை 
ஏற்க வைத்தாய் 

என் உயிர் பிரியும் என்று 
தெரிந்திருந்தால் அன்றே உனை 
தவிர்த்திருப்பேன் 

மறுஜென்மம் என்று ஒன்றிருந்தால் 
உன் காதலியாய் மீண்டும் வர வேண்டும்.....

பாகா  

Tuesday, November 15, 2016

வந்து விடு

வந்து விடு என் வாழ்வில் 
நீ மறுபடி வந்து விடு 

ஏனடி நீ பிரிந்தாய் 
என் உயிரினில் ஏன் கரைந்தாய் 

விழி மேல் இருக்கும் 
வில்லினால் ஏன் கணைகளை 
வீசினாய் என் மேல் 

தவறுகள் செய்தேன் மன்னித்து விடு 
நம் காதலை மறுபடி வாழ விடு...

பாகா 

Monday, November 14, 2016

நீ வேண்டும்

தேவதையே நான் உனக்கு 
தேவையடி என் வாழ்வில் 
நீ எனக்கு 

குழந்தையாய் அடி உன் சிரிப்பு 
அதில் தவழ்கிறேன் அடி 
தினம் நினைத்து 

குறும்புகள் நீ செய்கிறாய் 
அதில் என்னை கொல்லாமல் 
கொல்கிறாய் 

மறுக்கிறாய் நீ மறுக்கிறாய் 
என் காதலை ஏன் 
வெறுக்கிறாய் 

நாம் வாழும் வாழ்வெதற்கு 
எடுத்துக் காட்டாக திகழும் 
அது பிறர்க்கு 

ஏற்றுக்கொள் என் காதலை 

பாகா  

Friday, November 11, 2016

கண்டேன்

நேற்று தான் அடி உன்னைக் கண்டேன் 
இன்று நான் எனை உன்னில் கண்டேன் 
நாளை நாம் சேரும் கனவைக் கண்டேன் 

தொலைவில் அடி உன்னைப் பார்த்தேன் 
அருகினில் நான் வந்திடத் துடித்தேன் 
காதலை ஏன் சொல்லாமல் தவித்தேன் 

நானும் உன் நிழலாய்த் தொடர 
ஏனடி என் மனதை துரத்துகிறாய்.......

பாகா  

Thursday, November 10, 2016

ஏக்கம்

நீ இல்லாமல் வாடுகிறேன் 
என் நிழலிலும் உன்னைத் தேடுகிறேன் 

நீ வருவாய் என ஏங்குகிறேன் 
உனைத் தருவாய் என தேங்குகிறேன் 

உன் உருவம் நான் நாடுகிறேன் 
என் பருவம் அதை தவறுகிறேன் 

எந்தன் கனவில் நான் புலம்புகிறேன் 
உன்னை அடைவேன் என நம்புகிறேன்.....

பாகா  

Wednesday, November 9, 2016

நட்பு

சூரியன் என்னை சுட்டெரித்தது 
காற்று என்னை வருடியது 
மழை என்னை குளிர்வித்தது 

தப்பு செய்யும் போது சுட்டெரிக்கும் சூரியனாக 
துன்பம் வரும் போது வருடிக் கொடுக்கும் காற்றாக 
சந்தோசத்தில் என்னை குளிர்விக்கும் 
மழையாக வரும் நட்புக்கு 
நான் தலை வணங்குகிறேன்....

பாகா 

Tuesday, November 8, 2016

இரவு

அந்த சூரியனிடம் கூறினேன் 
நிலவாய் மாறியது 

வானத்திடம் கூறினேன் 
நட்சத்திரங்களை வரவழைத்தது 

அந்த கற்றிடம் கூறினேன் 
தென்றலாய் மாறியது 
என் உயிரே நீ உறங்குவதற்கு ......

பாகா 

Monday, November 7, 2016

வெற்றி சிற்பம்

உன்னுடைய கவலைகளை கண்ணீர்த் 
திவலைகளாக மாற்று அந்த 

கண்ணீர்த் திவலைகள் தோல்வி 
என்னும் பாறாங்கல்லைக் கரைத்து 

வெற்றி எனும் சிற்பத்தை உருவாக்கும்....

பாகா 


Saturday, November 5, 2016

குழந்தையின் கண்ணீர்

குழந்தைக்கு சூடு வைத்தான் தந்தை
பள்ளிக்கூடம் போகாததற்கு  அல்ல
வேலைக்கு போக மாட்டேன் என்றதால்.....?!!

பாகா

Friday, November 4, 2016

பெண்ணின் வேதனை

நான் கனியாக இருந்திருக்கலாம்
நெற்பயிராக இருந்திருக்கலாம்

தானிய வகைகளாக பிறந்திருக்கலாம்
மண்ணாக கூட இருந்திருக்கலாம்

அப்பொழுதாவது புழு பூச்சிகளை சுமந்திருப்பேன்....!

பாகா

Thursday, November 3, 2016

தாயின் வேதனை

உன்னை வெயில் படாமல்
மழை விழாமல்

தாலாட்டி சீராட்டி 
வளர்த்தேன் தொட்டிலில்

நீ வெறுத்ததால்
நான் இன்றோ
முதியோர் இல்லக் கட்டிலில்....

பாகா

Wednesday, November 2, 2016

தாயாக ஒரு தாயின் ஏக்கம்

அத்தை,பெரியம்மா,சித்தி என்று 
கூப்பிட கூடி வந்தன உறவுகள்

அம்மா என்ற தொப்புள் கொடி 
உறவுடன் என்று வருவாய் என் செல்லமே...

பாகா

Tuesday, November 1, 2016

இயற்கையின் காத்திருப்பு

சூரியன் ஒளி கொடுக்காமல்
மொட்டுகள் மலராமல் 

பறவைகள் சத்தமிடாமல்
பூச்சிகள் ரீங்காரமிடாமல்

காத்திருக்கின்றன அன்பே 
நீ கண்களை திறப்பதற்காக...

பாகா