Wednesday, November 30, 2016

பயம்

பயமே ஏன் நீ என்னுள் வந்தாய் 
நான் வெறுத்தாலும் ஏன் பின் தொடர்ந்து 
வருகிறாய் !
அவ்வளவு காதலா என்மேல் உனக்கு 

எதற்கெடுத்தாலும் பயம் எல்லாமும் பயம் 
ஏன் எனக்கு பயம் 
எங்கே சென்றாலும் பயம் 
எங்கே நின்றாலும் பயம் 
ஏன் இந்த பயம் 

இந்த ஜென்மத்தில் வந்த பயமா 
இல்லை போன பிறவியில் இருந்து 
தொடரும் பயமா 
இல்லை வரப் போகும் பிறவியின் 
தொடக்கம் இந்த பயமா 

மனமே பயம் இல்லாத என்னை உருவாக்கு 
இல்லை இந்நிமிடமே என்னை இந்த 
மண்ணுக்கு இரையாக்கு......!

பாகா 

No comments:

Post a Comment