Thursday, November 17, 2016

காதலியாய்

ஏனடா என் காதலன் ஆனாய் 
எனை உயிரோடு கொல்லும் 
கொலைகாரனும்  ஆனாய் 

கனவுகள் பல தந்தவனே 
உன் நினைவுகளில் எனை 
புதைத்தவனே 

பல வேதனைகள் நான் 
தந்த பின்பும் ஏன் எனை நீ 
தொடர்ந்து வந்தாய் 

நண்பனாய் என்று இருந்தவனை 
ஏன் காதலனாய் எனை 
ஏற்க வைத்தாய் 

என் உயிர் பிரியும் என்று 
தெரிந்திருந்தால் அன்றே உனை 
தவிர்த்திருப்பேன் 

மறுஜென்மம் என்று ஒன்றிருந்தால் 
உன் காதலியாய் மீண்டும் வர வேண்டும்.....

பாகா  

No comments:

Post a Comment