Thursday, November 24, 2016

கொல்லும் அழகே

கருமையான புல்வெளி போன்று
உன் கூந்தல் 

அருவியின் அழகையே தோற்கடிக்கும் 
உன் நெற்றியில் வழியும் வியர்வை

அலை மேல் எழுந்து நிற்கும் 
உன் புருவங்கள்

துப்பாக்கித் தோட்டா போல் 
என் இதயத்தை துளைக்கும்
உன் கருவிழி பார்வை

கத்தியைப் போன்று கூர்மையாக
இருக்கும் உன் மூக்கு

மலரின் இதழ்களைப் போன்று
மிருதுவாக இருக்கும் உன் காது மடல்

தேனில் ஊறிய பலாச்சுளை போன்று
உன் இதழ்கள்
என்னைக் கொல்கின்றதே...

பாகா 

No comments:

Post a Comment