Friday, November 18, 2016

இதயம் பறித்தாய்

நீ என் வாழ்வில் வந்தாய் 
மனதில் காதலைத் தந்தாய் 

சந்தோசமாய் என்னைக் கண்டேன் 
அதில் நான் உன்னைக் கண்டேன் 

இத்தனை வருட கனவு நினைவாகும் 
என்று நினைத்தேன் 
அது நடக்கவில்லை என்றபோது 
மிகவும் தவித்தேன் 

நான் உனக்கு முதல் இடம் 
என்று நினைத்தேன் 
நீயோ இரண்டாம் இடத்திற்கு 
என்னை உதறினாய் 

வேண்டாம் என்று உனை எடுக்க 
முயன்றேன் முடியவில்லை 
இன்றோ நான் எடுத்து விட்டேன் 
என் இதயத்தையே 
இனி என் இதயம் எவரிடமும் 
காதல் கொள்ளாது.....

பாகா  

No comments:

Post a Comment