Monday, November 28, 2016

காதல் கொண்டாயோ

வேருக்கு மண்ணின் மேல் 
இருக்கும் பிணைப்பைப் பார்த்து
நீயும் என் கைகளைக் கொண்டு
உன்னை பிணைத்துக் கொண்டாயோ

மழைத்துளிகளுக்கு மண்ணின் மேல் 
உள்ள ஆசையால் வந்து நிலத்தை
அடைகின்றன அதைப் பார்த்து 
நீயும் என் மேல் உள்ள ஆசையால்
முத்த மழை பொழிந்தாயோ

காற்றுக்கு மரத்தின் மீது
கொண்ட விருப்பத்தால் இலைகளை 
கோதி விடுவது போல் நீயும்
என் மீது உள்ள விருப்பத்தால் 
என் கூந்தலை கோதி விடுகின்றாயோ 

வண்டிற்கு தேன் மீது உள்ள 
காதலைப் பார்த்து அன்பே
நீ என்னை காதல் செய்தாயோ.....

பாகா


No comments:

Post a Comment