Saturday, November 19, 2016

கேள்விக்குறி

ஏன் எந்தன் வாழ்வில் வந்தாய் 
ஏன் என்னை ஏமாற்றிச் சென்றாய் 

எதற்கு என்னிடம் பொய்கள் கூறினாய் 
எதற்கு அதை மெய் போல் கூறினாய் 

எப்படி என்னை ஏமாற்றினாய் 
எப்படி காதலித்து ஏமாற்றினாய் 

எங்கே இன்று நீ ஓடினாய் 
எங்கே எனை விட்டு ஓடினாய் 

என்ன கூறினாய் என்னிடத்தில் 
என்ன செய்கிறாய் இவ்வுலகத்தில் 

ஏன்? எதற்கு?எப்படி?எங்கே?
என்ன? என்று உன்னிடம் 
கேள்வி கேட்காததால் நான் 
இன்று நிற்கிறேன்  
கேள்விக்குறியாய் "?"

பாகா 

No comments:

Post a Comment