Tuesday, November 22, 2016

எப்போது வருவாய்

இவ்வுலகில் நான் உனக்காக வந்தேன்
உனக்காகவே வளர்கிறேன்
உனக்காகவே வாழ்கிறேன்

நீ என்று என் வாழ்வில் வருவாய்
எனைத் தேடி எப்போது வருவாய்
உன் உள்ளத்தை எப்போது தருவாய்

என் விரல்களோடு உன் விரல்கள் கோர்ப்பாயா
என் வெற்றி தோல்விகளில்
என்றும் துணையாக இருப்பாயா

என் வாழ்நாள் முழுவதும் என்னுடன்
இருப்பாயா
நாம் சேர்ந்து இவ்வுலகினில் வாழ்வோமா
இல்லை நான் மட்டும் வாழ்ந்து சாவேனா ....

பாகா 

No comments:

Post a Comment