Monday, October 23, 2017

நானே போயிடுறேன் கண்ணீருடன்

என்னை விட உன் மேல பாசம்
வைக்க யாருமில்ல
இது வரை நீ போட்ட வேஷம்
எனக்கு தெரிய வில்லை

நான் இல்லை என்று விலகும்
போது படிய வச்ச
உன்னை தேடி நான் வந்தப்ப
ஓடி ஒளிந்து கிட்ட

அப்போவே இது உனக்கு தெரியலயா
உங்க அப்பா அம்மா விரும்ப மாட்டாங்கனு
புரியலயா

என் வழியில் நானும் அப்போ போய் இருப்பேன்
என் வாழ்க்கை இது என்று தானே
நினைத்திருப்பேன்

அப்போ என் வாழ்க்கையை நீயே
முடிவு செஞ்ச
இப்போ தள்ளி விட்டு போறியே நான்
என்ன செய்ய

தேன் தடவின பேச்சால என்னை
மயக்கி வச்ச
இப்போ தினம் தினம் கண்ணீரில
என்னை நீ நனைய வச்ச

நல்லாயிரு என்று சொல்ல நான்
தியாகி இல்ல
நாசமா நீ போயிடுனு சொல்ல நான்
பாவியும் இல்ல

பாகா   

Monday, September 11, 2017

நீரை வீணாக்காதீர்

நான் இன்றி இங்கு எந்த உயிருமில்லை
எனை காணாத எவரும் இவ்வுலகில்
இல்லை


நீர் தானே என்று நீ வீணாக்கினாய்
உன் எதிர்கால வாழ்க்கையை தெரிந்தே
பாழாக்கினாய்


மேகத்தில் இருந்து தான் பிறக்கும் நேரம்
உன் தாத்தாக்கள் என்ன செய்தார்கள்
அந்நேரம்


வீட்டு மாடத்தில் பாத்திரங்கள் திறந்து வைப்பர்
என்னை துளி கூட ஒதுக்காமல் நிரப்பி
உபயோகிப்பர்


நீ இன்று என்னை இப்படி கண்டதுண்டா
நான் சாக்கடையில் கலப்பதும் ஏன்
உனக்கு புரிவதுண்டா


எல்லாமே நீ செய்யும் தவறு மனிதா
உனை நீயே திருத்திக்கொள் உயர்வு
மனிதா

உன் தலைமுறைக்கு இருப்பதால் வீணடிக்கிறாய்
உன் எதிர்கால சந்ததியரின் வாழ்வை
சீரழிக்கிறாய்



பாகா

Monday, September 4, 2017

துணிந்து எழு

துரோகிகள் நம்மை சூழ்ந்து முதுகில் குத்தும் நேரம் 
கிழிந்து போகும் காகிதம் போல் அல்லாமல் 
நெருப்பை உமிழும் எரிமலை போல் பொங்கி எழ வேண்டும் 

நம்மை பிரித்தாளும் துரோகிகளை இனம் கண்டுகொண்டு 
தனி தனியே பிரிந்து விழும் நூலைப்போல் இல்லாமல் 
ஒற்றுமையாக இருந்து ஒளிகொடுக்கும் திரியை போல் 
சேர்ந்து பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டும் 

மக்களுக்கு சேவகம் பார்ப்பதற்கே அவர்கள் வேலை 
ஆனால் அதிகாரம் கொண்டு ஒடுக்க நினைத்தால் 
துணிந்து எழுந்து நியாயமான எதிர்ப்பை காட்டுங்கள்  

மாணவப்பிஞ்சுகளே நம் தேசத்தின் தூண்கள் 
குழந்தைகளை மனமுடைய செய்யும் அதிகாரவர்கத்தை ஒடுக்கி 
அனைவரும் சேர்ந்து பாடம் புகட்டுங்கள் 

அதிகாரம் நாம் கொடுத்தது என்பதை அவர்கள் செவிப்பறை 
கிழிய சொல்லுங்கள் 
உங்கள் கோபத்தை அணைய விடாமல் நெருப்புக்கு 
ஆக்சிஜென் கொடுப்பது போல் கோபத்தை அணையாமல் 
கொழுந்துவிட்டு எரிய பார்த்துக்கொள்ளுங்கள் 

அவர்களை செய்யும் தக்க நேரம் வரும் அப்போது மறக்காமல் 
மன்னிக்காமல் செய்யுங்கள்  பிஞ்சின் மனம் சாந்தி அடையட்டும்...

பாகா  

Monday, August 28, 2017

நெல்மணி

மண்ணில் புதைத்து வைத்தாலும்  
நானும் திமிறி எழுந்தேன் உங்களுக்காக 

நான் வளரும் பருவ காலம் பல 
இயற்கை மருந்துகளை கொடுத்து வளர்ந்தேன் 

இப்போது பல செயற்கை மருந்துகளை 
கொடுத்து என்னையும் மண்ணையும் கெடுத்தார்கள் 

எங்கள் பலன்கள் குறையத்துவங்கியதும் 
எங்களை குறை சொன்ன மனிதர்கள் 
இது அவர்களின் தவறு என்று உணரவில்லை 

எங்கள் பருவ காலம் முடிந்து 
அறுவடை காலத்தில் அறுவடை செய்வார்கள் 

எங்களை பிரித்தெடுத்து அடித்து 
சகோதர சகோதரிகளை தரம் பிரித்து வைப்பார்கள்

நாங்கள் பிறந்த வீட்டில் இருந்து 
புகுந்த வீட்டுக்கு செல்வதை போல் நாங்களும் 
தயாராவோம் 

நாங்கள் இவ்வளவு தூரம் கடந்து வந்து 
எங்களை சாப்பிடாமல் வீணடிப்பார்கள்

உங்கள் வீட்டில் நாங்கள் வந்தால் எங்களை 
வீணடிக்காமல் இயலாதவர்களுக்கு கொடுங்கள் 
இப்படிக்கு 
உங்கள் நெல்மணி 


பாகா   

Monday, August 14, 2017

வாழ்க்கை ஒரு பயணம்

முடிவில்லா பயணத்தில் வழியறியா 
பல பாதைகள் 

பாதைகளின் வழி நடுவே பார்த்திடாத 
பல முகங்கள் 

பார்த்து பழகிய சில முகங்களின் மனங்களில் 
மாட்டிய பல முகமூடிகள் 

எது நம் பாதை என அறிவதற்குள் தடுமாறும் 
பல வழித்தடங்கள் 

வெற்றியை நோக்கி நெருங்கும் வேளையில் 
வரும் பல தோல்விகள் 

தோல்வி தான் வரும் என்று நினைத்த வேளையில் 
வரும் பல வெற்றிகள் 

நாம் நினைத்த இடத்தில் இறங்க வாழ்க்கை 
பேருந்து  இல்லை 

காற்றடித்து காற்றின் திசையில் பறக்கும் காகிதம் போல் 
சூழ்நிலை உருவாக்கும் பாதையில் நம்மை அறியாமல் 
செல்வதே நம் வாழ்க்கை பயணம் 

பாகா   

Monday, August 7, 2017

நான் தான் பொய்

நான் இல்லாமல் எவருமே இல்லை 
இவ்வுலகில் 
நன்மைக்காகவோ அல்லது தீமைக்காகவோ 
என்னை உபயோகப்படுத்துவர் பலர் 

என் மீது பயம் கொண்டவர் சிலர் 
அதனால் அவர்கள் வாழ்வில் அடைந்தனர் 
நல்ல பலன் 

நேர்மைக்கு எதிரானவன் நான் 
உண்மைக்கு புறம்பானவன் நான் 
நான் ஒரு முறை உங்கள் வாழ்வில் வந்தால் 
பன்மடங்கு பெருகி வரும் பிரச்னைகள் 

நான் யார்? நான் யார்? 
நான் தான் பொய் 
எனை கொண்டவர் எவரும் இவ்வுலகில் 
உயர்ந்தவரில்லை 

என்னை உணர்ந்து திருந்தியவர் இவ்வுலகில் 
தாழ்ந்தவர் இல்லை 
பொய் கூறி அதை உணர்ந்து திருந்தியவர்களை 
மறந்து மன்னியுங்கள்!!


பாகா  

Monday, July 31, 2017

தனிமை ஓவியா

தனிமை என்ற இன்பத்தை நீ இன்பமாக 
விரும்பினால் அது ஒரு போதை 

மற்றவர்கள் உன்னை அந்த நிலைக்கு தள்ளினால் 
அது உன் வாழ்க்கை வெற்றிக்கான பாதை 

எல்லாருக்கும் நீ செய்வது தவறாகவே தெரியலாம் 
உன் மனதை கேள் அது உண்மை சொல்லும் 

கூடவே  இருந்து நம் உழைப்பை உறிஞ்சு எடுக்கும் 
ஒட்டுண்ணி தாவரமாக இல்லாமல்  தனி ஒரு 
மரமாக நிலைத்து நின்றாய் 

பிறர் போல் நீயும் வாயில்  வந்தவற்றை பேசாமல் 
நல்லதையே பேசும் பொறுமை கொண்டாய் 

பிறர் படும் துன்பத்தை நீ கண்டு துடித்தாய் 
நீ படும் துன்பத்திற்கு யார் ஆறுதல் கூற 
என்று தவித்தாய் 

எது சரி தவறு என்பதை பட்டென சொன்னாய் 
அம்பு போல் உன் உள்ளம் தைத்தவர்களை 
உன் அன்பினாலே வென்றாய் 

எவ்வளவு தான் கஷ்டம் வந்தும் உன் புன்னகையை 
கொண்டு வென்றாய் 

உனக்குள்ளும் உணர்வு உள்ளது என்பதை 
கண்ணீரிலே சொன்னாய் 

குழந்தை போல் நீ எல்லார் மனங்களையும் வென்றாய் 
பல பொன்மொழிகள் எனக்குள் உண்டு நான் 
குழந்தை இல்லை என்றாய் 

அழகு என்றால் புற அழகை என்று சொல்லும் சில பேர் 
இன்று உந்தன் மனஅழகை கண்டு வியந்து நின்றார் 


ஓவியா என்று நீயும் உன் பெயரை சொன்னாய் 
நம் வாழ்க்கை நாம் வரையும் ஓவியம் என்று எங்களுக்கு 
சொன்னாய்.....! 


 பாகா 

Monday, July 24, 2017

கஷ்டப்படாமல் இருக்க கஷ்டப்படுங்கள்

கஷ்டப்படுத்து கஷ்டப்படுத்து
உன்னை நீயே கஷ்டப்படுத்து 

பிறர் வந்து துன்புறுத்தும் முன்னே 
உன்னை நீயே கஷ்டப்படுத்து 

நன்மை உந்தன் வாழ்வில் எந்நாளும் 
கிடைக்க தினமும் உன்னை 
கஷ்டப்படுத்து 

கஷ்டத்தை நீயும் இஷ்டமாக்கி கொண்டால் 
எதிர்காலம் உனக்கு பொற்காலமாகும் 

உன் தலைமுறை என்றும் நன்றாக வாழ 
அனுதினமும் உன்னை கஷ்டப்படுத்து 

இளமை பருவத்தை வீணாக்காமல் 
முழுவதுமாக உன்னை கஷ்டப்படுத்து 

வரும்காலத்தை உந்தன் வசமாக்கி கொள்ள 
உன்னை மிகவும் கஷ்டப்படுத்து 

முதுமை காலத்தில் உன்னை யாரும் 
கஷ்டப்படுத்தாமல் இருக்க இப்பொழுதே 
உன்னை கஷ்டப்படுத்து 


பாகா 



Monday, July 17, 2017

அமைதி போராட்டம்

இயற்கை என்பது பொதுவானது 
இயற்கைக்கு சொந்தம் கொண்டாட ஒருவரால் முடியாது 

அனைவர்க்கும் சமமானதே இயற்கை 
நம் வளங்களை நாமே காக்க வேண்டும் 

காக்க வேண்டியவர்கள் தவறினால் 
நாம் நியாபகப்படுத்துவதில் 
தவறில்லை 

கிடைக்க வேண்டிய அடிப்படை தேவைகளை
கேட்டு பெற்றால் நலம் 

போராடி பெற்றால் பொதுநலம் 
எடுத்துக்காட்டான அமைதி போராட்டத்தை
முன்வையுங்கள் 

உங்களை ஒடுக்க வருபவர்களை 
அமைதியோடு புரிய வையுங்கள்

அவர்கள் அறியாமையில் துன்புறுத்தினால் 
அவர்களையும் சேர்த்து துன்புறுத்தாமல் 
அவர்களுக்காவும் போராடுகிறோம் என்பதை அவர்கள் 
மனதில் பதியுங்கள் 

தன்னை கொளுத்தினால் அவர்களையும் சேர்த்து 
 கொஞ்சம் கொஞ்சமாக கொல்லும் 
சிகெரெட்டை போல் அல்லாமல் 

தன்னை  கொளுத்தினாலும் உங்களுக்கும் சேர்த்து  
ஒளியை தருகிறேன் என்று சொல்லும் மெழுகுவர்த்தியாய் 
இருங்கள் 

அமைதிப்போராட்டத்தின் வெற்றி சத்தம் 
ஒரு நாள் விண்ணை முட்டும்  


பாகா 


Monday, July 10, 2017

விவசாயியே கடவுள்

இவ்வுலகில் எனை படைத்ததற்கு 
கடவுளே என்னை மன்னித்து விடு 

இவ்வுலகில் அனைவரும் என்னை விரும்பும் 
வரம் கொடுத்ததற்கு கடவுளே என்னை 
மன்னித்து விடு 

ஜாதி மதம் என்று என்னை பாராமல் 
அனைவர்க்கும் கொடுத்ததற்கு கடவுளே 
என்னை மன்னித்து விடு 

உன்னை நீ பட்டினி போட்டு என்னை 
இவ்வுலகில் வளர்த்ததற்கு கடவுளே  
என்னை மன்னித்து விடு 

உன் கண்ணீரை நீராக்கி எனை 
ஊட்டி வளர்த்ததற்கு கடவுளே 
என்னை மன்னித்து விடு 

கடவுளுக்கு மரணம் கொடுத்த எங்களை 
மன்னித்து விடு கடவுளே மன்னித்து விடு 

பயிர்களாகிய எங்களை இவ்வுலகில் 
கொண்டு வந்த விவசாயிகளே நீங்கள் தான் 
எங்களுக்கு கடவுள் 

எவரும் உங்களை நினைக்கவில்லை 
என்று கவலை கொள்ளாதீர்கள் 
பயிர்களாகிய நாங்கள் இருக்கும் கடைசி 
மணித்துளி வரை உங்களை நினைத்திருப்போம் 
கண்ணீருடன்....?!

கடவுள் = விவசாயி 

பாகா 

Monday, July 3, 2017

காகிதம் மேல் பேனா காதல்

என் இதழால் உன் உடம்பை 
தொட்டு வருடிய அந்த அழுத்தங்கள் 

என் எச்சில் முத்தங்களால் உன் 
உடல் முழுவதும் உள்ள தழும்புகள் 

உன் தழும்புகள் பார்ப்பவர்கள் 
கண்களுக்கு விருந்து படைக்கும் 

நம் காதலை இந்த உலகம் 
காதலிக்கும் 

நம் காதல் பல காதலர்களை சேர்த்து 
வைக்கும் மொழி 

என் உயிர் பிரியும் நேரக் கடைசி நொடியில் 
உன் அழுகை மொழியில் 
உன் உடம்பில் ஏற்படுத்துவாய் காயம் 
நான் போனால் என்ன நீ வாழ்வாய் 
இவ்வுலகில்  பல்லாயிரம் ஆண்டுகள் அந்த 
சந்தோசத்தில் நான் போகிறேன் இவ்வுலகை விட்டு....!

பாகா  

Tuesday, June 27, 2017

தூக்கம் தொலைத்தேன்

விழிகளில் தூக்கம் வரவில்லை 
மனதினில் பாரம் ஒன்று 
இருப்பதினால் விழிகளில் தூக்கம் 
தூரம் விலகிப் போகிறது 

கண்களின் கண்ணீரை கைகளில் 
துடைப்பேன் 
மனதினில் கண்ணீரை எவ்வாறு 
துடைப்பேன் 

இமை என்ற கதவை கண்களுக்கு 
கொடுத்தான்  
மனதிற்கு கதவை கொடுக்க 
மறந்து விட்டான் இறைவன்!

பலநாள் தூக்கத்தை தொலைத்து 
விட்டேன் 
மனதின் குழப்பத்தால் என்னையே 
எனைத் தேடுகிறேன் 

கடவுள் என்னிடம் வரம் கேட்டால்  
மனதில் திரை எனும் ஒரு அணை 
போடாக கேட்டிடுவேன்..!


பாகா 

Monday, June 19, 2017

ஏன் இந்த உணர்வு

தோற்று தோற்று விழுகிறேன் 
இருந்தும் தோல்வி எனக்கு 
பழகவில்லை 

பயந்து பயந்து வாழ்கிறேன் தினமும் 
இருந்தும் பயம் எனக்கு 
பழக வில்லை 

என் மனம் எதையும் நாடவில்லை 
எனக்கு எதன் மேலும்
நாட்டம் இல்லை 

நெஞ்சிற்குள் நான் எதையும் 
நினைக்கவில்லை ஆனால்  சில 
நினைவுகள் என்னை விடுவதில்லை 

காயங்கள் எதுவும் பெற்றதில்லை 
ஆனால் வலியில்லா உணர்வு 
என்றும் எனக்கு இருந்ததில்லை 

வாழ்க்கையில் எதையும் தொலைக்கவில்லை 
ஆனால் என் கையில் 
எதுவுமே இல்லை 


பாகா   

Monday, June 5, 2017

பசி

பணம் கொட்டும் மனிதர்களிடம் இல்லாத
ஒருவன் நான்

நான் இருக்கும் இடத்தில் நோய்கள்
அண்டாது

பணம் படைத்தவர்களிடம் இல்லாத நான்
ஏழைகளின் வீட்டில் அன்றாடம் இருப்பேன்
 
நான் ஏழைகளின் சாபம்
பணக்காரர்களுக்கு நான் ஒரு வரம்!!!

என்னை ஒழிக்க பல தலைவர்கள் வந்தாலும்
உலகளாவி நான் பறந்து விரிந்திருக்கின்றேன் 

இன்னுமா என்னை தெரியவில்லை
நான் தான் பசி..!!

பாகா 

Monday, May 29, 2017

திங்கட்கிழமை

நேரத்தின் நேரமும்  காலத்தின் காலமும் 
சூழ்நிலையை வைத்தே அது வேகமா செல்கிறதா 
இல்லை தாமதமாக செல்கிறதா என்பது 

நமக்கு பிடித்த தருணங்கள் அனைத்தும் 
வேகமாக செல்வது போலவும் 
நமக்கு வேதனை அளிக்கும் தருணங்கள் 
தாமதமாக செல்வது போலவும் தோன்றலாம் 

அது கால நேரத்தின் தவறு அல்ல 
நம் மனநிலையை பொறுத்தே அமையும் மாயாஜாலம் 

உதாரணமாக திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை 
ஆமை போலவும் 
வெள்ளிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை இரவு வரை முயல் போலவும் 

ஒரு மாயாஜால மனநிலையை நமக்கு கொடுக்கின்றன 
வரவேற்போம் திங்கட்கிழமையை சந்தோச மனநிலையுடன்......!

பாகா 

Monday, May 22, 2017

நீ என் பேரழகு

காற்றடித்து பூவில் இருந்து இதழ்கள் பிரிந்து 
விழும் அழகை விட 

அன்பே நீ இதழ் சுளித்து என்மேல் காட்டும் 
கோபம் மிக அழகு 

மலையில் மறைந்து மறைந்து செல்லும் 
மேகக்கூட்டங்களின் அழகை விட 

அன்பே என் மனதில் வந்து வந்து போகும் 
உன் முகம் மிக அழகு 

திடீரென வந்து எனை நனைக்கும் மழையின் 
அழகை விட 

நீ தரும் நொடிப்பொழுது முத்தமழையில் 
நனைந்திடுவது மிக அழகு 

என் நிழல் போல் நீ என்னை தொடர்ந்து வருவதே 
என் வாழ்வில் நான் செய்த பேரழகு 

பாகா 

Monday, May 15, 2017

துவண்டு விடாதே

வாய்ப்புகள் வரவில்லை என்று இருள் 
சூழ்ந்ததைப் போன்று எண்ணாமல் 
முயற்சி என்ற ஒளிவிளக்கை 
எப்போதும் உன்னிடம் வைத்துக் கொள் 

மரத்தைப் போன்று உடைந்து விடாதே 
தோல்வி என்ற காற்று உன்னைத் 
தாக்கும் பொழுது 
பசும்புல்லைப் போல் வளைந்து கொடுத்து 
வெற்றிகளைப் பிடித்துக் கொள் 

துன்பம் வரும் பொழுது கண்ணீர் விட்டு அழு 
ஒரு மெழுகுவர்த்தியைப் போல் 
மெழுகு போல் உன் உழைப்பை உருக்கி 
வெளிச்சம் என்ற இன்பத்தை உன்னை 
நம்பியிருப்பவருக்கு கொடு 

உன்னை நம்பு உன்னை நம்பியிருப்பவர்களை 
நம்பு நம்பிக்கையாய் வாழு.....!

பாகா 

Monday, May 8, 2017

நேர்மறை எண்ணம்

பிரச்சனைகளே வாழ்வாய் 
இருந்த எனக்கு சந்தோசம் 
எனும் தீர்வாய் வந்தாய் 

பயந்து பயந்து வாழ்ந்த 
என்னை தைரியமாக 
வாழ வைத்தாய் 

எதிர்காலத்தை பயந்து பார்த்த 
என்னை நிகழ்காலத்தை 
நினைத்து சந்தோசம் கொள்ள வைத்தாய் 

கெட்டதே நடக்கும் என்று நினைக்கும் 
என் மனதை நல்லதே நினை 
என்று நினைக்க வைத்தாய் 

இறுதி வரை நீ என்னுடன் வரவேண்டும் 
என் உயிர் இறக்கும் வரை நீ 
என்னுடன் வர வேண்டும் 

நல்லதையே நினைக்க வைத்த நீ 
என்னுடன் இறுதி வரை வருவாய் 
என்றே எண்ணத் தோன்றுகிறது...! 

பாகா 

Tuesday, May 2, 2017

காதல் பயம்

இது சாத்தியமா என்று நினைக்கையிலே 
நம் மனதில் உள்ளதை கூறி விட்டோம் 

இரு உயிர்களாய் இருந்த நாம் 
ஓருயிர் ஆகி விட்டோம் 

நீ நான் என்று இருந்த நாம் 
நாம் என்று ஆகிவிட்டோம் 

பார்வையிலே என்னை சீண்டி விட்டாய் 
என் மனதை ஏனோ தூண்டி விட்டாய் 

சிரிப்பினில் என்னை கொன்று விட்டாய் 
அதில் தினம் தினம் எனை திணறடித்தாய்

குழந்தை போன்ற முகத்தை கொண்டு 
குழந்தை போல் எனை பாதுகாத்தாய் 

உன் மூச்சுக் காற்றில் உயிர் வாழ்கிறேன் 
நீ இல்லையேல் நான் ஏனோ வாடுகிறேன் 

வேண்டும் நீ எனக்கு என் வாழ்வில் 
உன் அரவணைப்பில் நான் இவ்வுலகில் 
வாழ வேண்டும் 

நம்பாத போது வராத பயம் 
நம்பும் இந்த நேரத்தில் ஏனோ 
ஒரு இனம் புரியாத பயம் 

வருவாயா என்னுடன் என் வாழ்நாள் முழுவதும் 
இல்லையேல் என் உயிர் மடியும் உன் மடியில்.....

பாகா  

Monday, April 24, 2017

பெண்ணின் சொல்லாத காதல்

கண்டுவிட்டேன் இன்று உன்னை 
என்னுள் என்னை நான் புதிதாய் 
கண்டேன் 

மிக அருகில் நீ இருந்தும் இத்தனை நாள் 
எங்கோ உனை தினம் தினம் 
தேடி அலைந்தேன் 

என்று என் வாழ்வில் நீ வந்தாயோ 
அன்று என்னையே நான் அழகாய் 
கண்டேன் 

எனக்குள் நீ துளித்துளியாய் கலந்து விட்டாய் 
உன்னைப் பிரிக்க இனி என்னாலும் 
எந்நாளும் முடியாது 

ஒரு வேளை நீ பிரிந்து போனாலும் 
என்னால் உன்னுடன் இருந்த நினைவுகளை 
அழிக்க முடியாது 

நண்பனாய் இருந்த நீ என் 
மனதுக்குள் எப்போது காதலை விதைத்தாய் 
நீ என்னுடன் என் வாழ்வில் வந்தால் 
என் வாழ்வு சிறக்கும் 

ஆனால் அது சாத்தியமில்லை 
உன்னைப் போன்று ஒருவனை நான் 
இனிமேல் காண்பேனா என்று தெரியவில்லை 

ஆனால் உன் வாழ்வில் நீ நினைத்ததை 
அடைய இறைவனை வேண்டுவேன் 
என் உயிர் மூச்சு நிற்கும் வரை.........

பாகா 

Friday, April 14, 2017

தமிழ் புத்தாண்டு 2017

மண்ணில் பிறந்து பிறந்த மண்ணை தெய்வமாய் வழிபட்டு 

மண்ணிற்கு வளம் சேர்த்து
மண்ணை மட்டும் குளிர வைக்காமல் 
மக்களின் வயிறையும், மனதையும் 
குளிர்வித்து

ஒவ்வொரு நொடியும் உலகில் எங்கெங்கும் உள்ள உயிர்கள் 
பசியாறும் வண்ணம் உழைக்கும் மண்ணின் நாயகர்கள்
விவசாயிகளுக்கு நல்லதொரு பத்தாண்டாய் அமையட்டும் 

இனிய தமிழ் புத்தாண்டு 
நல் வாழ்த்துக்கள்

பாகா

Monday, April 3, 2017

சூரியனின் சிரிப்பு

நான் சுட்டெரிக்கும் அனல்
என்றுமே கொதிக்கும் தணல் 

சுட்டெரிப்பது என் குணம் 
இன்று நேற்றல்ல கடவுளின் படைப்பில் 
நான் பிறந்ததிலிருந்து

கோடை வரும் பொழுது எல்லாம்
அனைவரும் என்னை கரித்துக்கொட்டுகிறீர்கள்
மரங்களை வெட்டி மனைகளாக்கியது நீங்கள்
ஆனால் பழி என் மேல் 

நான் எதையும் மாற்றிக் கொள்ளவில்லை 
பூமியை இஷ்டப்படி பாழாக்கியது நீங்கள்
எப்பொழுதும் ஒரே மாதிரி கொதிக்கும்
என் பண்பில் நான் அணு அளவும் மாறவில்லை

எங்கும் எதிலும் மாற்றம் என்ற வார்த்தையை 
வைத்துக் கொண்டு இஷ்டப்படி மாற்றினீர்கள் பூமியை
சந்தோசமாக கஷ்டப்பட கற்றுக்கொள்ளுங்கள்

இனியும் திருந்தாவிட்டால் உங்கள் அழிவு
நிச்சயம், மக்களே விழித்தெழுங்கள் 
ஒவ்வொருவரும் உங்களால் முடிந்த அளவு
மரங்களை நடுங்கள் உங்களை காப்பாற்றிக் கொள்ளுங்கள்.......!!!

பாகா

Monday, March 27, 2017

பிரிந்து செல்வாயோ

என்று நான் உனைப் பார்த்தேனோ 
அன்று நீ என் மனதில் பதியவில்லை 

என்று உன்னுடன் பழகினேனோ 
அன்றே என் கண்களுக்குள் வந்து விட்டாய் 

உன் நகைச்சுவையான பேச்சில்
என்னை அறியாமல் மயங்கினேன் 

நீ என்னுடன் இருக்கும் ஒவ்வொரு நொடியும் 
இந்த உலகையே என் கைக்குள் கொண்ட 
சந்தோசத்தை உணர்ந்தேன் 

ஒரு நாள் உனை பார்க்காவிடில் 
இந்த உலகையே வெறுமையாய் 
நான் உணர்ந்தேன் 

பார்த்து பழகி என் மனதில் குடிவந்த 
நண்பனே உன்னை மிகவும் பிடிக்கும் 

பிடித்தவை எல்லாம் எனை விட்டு பிரிந்து போகும் 
வரம் எனக்கு நீயும் என்னை விட்டு 
பிரிந்து விடுவாயோ நண்பனே......!


பாகா    

Monday, March 20, 2017

என்ன தவறு செய்தேன்

என் நிழல் போல் தொடர்ந்து வந்த நீ 
தீடிரென்று தோன்றி மறையும் மேகங்கள்
போல் ஏன் மறைந்தாய் 

என்னிடம் பேசிப் பேசிக் கழித்த நீ 
இன்று நீ உன் முகம் கூட 
காட்டாமல் எங்கு போனாய் 

உன்னை நண்பன் என்று நினைத்த 
என்னை;நீ வெறும் நபர் 
என்று நினைத்து விட்டாயோ 

தவறு ஏதும் செய்திருந்தால் 
உரிமையாய் சுட்டிக் காட்டு 
ஆனால் தள்ளி வைத்து என் மனதைக் 
குத்திக் காட்டாதே 

என்றும் உன்னுடன் ஒரு நல்ல 
நட்பை விரும்பினேன் 
ஆனால் நீயோ என்னை வெறும் 
குப்பை என்று நினைத்து விட்டாயோ.......!?


பாகா 



Monday, March 13, 2017

உன்னைக் காதல் செய்

புதிதாய் காணும் ஒவ்வொருவரும் 
இவள் என்னவள் என்று கண்கள் கூறும் 
ஆனால் மனது கண்கள் கூறுவதை 
நம்பி ஏமாறாதே எனக் கூறும் 

நான் கண்கள் கூறியவற்றை நினைத்து 
ஆனந்தப்பட்ட சில நாட்களில் 
மனது வென்று விடும் 

இனிமேல் கண்களை நம்புவதில்லை 
என் காதலி என்னிடம் வரும் வரை 
அந்த இடத்தில் யாரையும் வைத்து ஏமாற விரும்பவில்லை 

என்னை என் காதலியை விட 
விரும்பும் ஒரு உயிர் உலகத்தில் உள்ளது 
ஆம் தினமும் என்னை காதலிக்கும் 
அந்த உயிர் என்னை மிகவும் ரசிக்கும் 

ஆம் அது வேறு யாருமில்லை நான் தான் 
நம்மைத் தவிர வேறு யாரால் நம்மை 
மிகவும் நேசிக்க முடியும் 
நம்மை காதலித்தால் வாழ்வு இனிதாகும்....!


பாகா 

Monday, March 6, 2017

சூரியனின் வெட்கம்

சூரியனிடம் வெட்கத்தை 
கண்டேன் 
மேற்கு வீட்டில் 
மேகம் எனும் திரைச்சீலையில் 
முகத்தை மறைத்துக் 
கொள்ளும் பொழுது.....!

பாகா  

Tuesday, February 28, 2017

என்னவன்

என்னவனுக்கு மட்டுமே என்னைத் 
தர வேண்டும் 
அதில் நான் பேரின்பம்  
பெற வேண்டும் 

என்னவன் என்னுடன் மட்டுமே 
வாழ வேண்டும் 
அவனுடன் என் சந்தோசங்களை 
பகிர வேண்டும் 

என் நெஞ்சில் புதைந்துள்ள 
ஆசைகளை எல்லாம் 
அவன் கிளறி எடுத்து 
நிறைவேற்ற வேண்டும் 

நம் வாழ்நாள் முடியும் 
நேரம் வரும் போது 
இருவர் மூச்சும் ஒருசேர 
பிரிய வேண்டும்......!

பாகா 


Friday, February 24, 2017

ஜெயலலிதா அம்மாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

தமிழ்நாட்டின் என்றென்றும் ராணி நீ தான் 
அரசியலில் உன்னை தவிர்த்து ஒன்றுமே இல்லை 
கம்பீரத்துக்கே உருவம் கொடுத்தாய் நீ 

எதிரிகள் கூட்டமாக நின்று எதிர்த்த போது 
தனியாக  நின்று  மக்கள் படையோடு சேர்ந்து 
அவர்களை திக்குமுக்காட செய்தாய் நீ 

எத்தனையோ போராட்டங்கள் 
ஒரு துளி கண்ணீரும் இல்லை உன் கண்களில் 
சிரிப்பினால் வென்றாய் ஒவ்வொரு போராட்டத்தையும் 

மரணம் என்ற எமன் நடத்திய போராட்டத்தில் மட்டுமே 
நீ போராடி இறைவனடி சேர்ந்தாய் நீ தோற்கவில்லை 
எங்கள் இதயங்களில் என்றுமே நீ வாழ்கின்றாய் 

பெற்ற அம்மாவிற்கு அடுத்து உன்னையே அனைவரும் 
அம்மா என்றழைத்தனர், நீ மறைந்தாலும் எங்கள் நெஞ்சில் 
உன் சிரித்த முகம் நீக்கமற நிறைந்து இருக்கிறது...!

இவ்வுலகம் இருக்கும் வரை உன் புகழ் என்றுமே நிலைத்து நிற்கும் 
மக்களின் ராணிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் 

பாகா  

Tuesday, February 21, 2017

மழை மேல் மண் கொண்ட காதல்

நீ என்னைத் தொட்டதும் 
பரவும் வாசனையை பிடிக்காதவர் 
எவரும் இல்லை 

நீ சிரிப்பதை யாரும் ரசித்ததில்லை 
அழுவதை ரசிக்காதவர் எவரும் இல்லை 

நீ வந்து என்னைத் தழுவும் போது 
என் உடலில் சூடு பறந்து போகும் 

நீ என்னை தீண்டியதன் 
விளைவாய் நான் பெற்றேன் 
பல பிள்ளைகளை 

நம் பிள்ளைகளால் இவ்வுலகம் 
தூய்மையான காற்றை சுவாசிக்கும் 

என்மேல் உனக்கு காதல் 
உன்மேல் எனக்கு காதல் 
நம்மேல் அனைவருக்கும் காதல் 

பாகா  

Friday, February 17, 2017

கடவுளுக்கு ஒரு கடிதம்

மனித ஜென்மம் கொடுத்ததற்கு நன்றி 
சந்தோசமாய் கழிந்தது 
என் சிறுவயது 

உடன்பிறப்புகளுடன் மகிழ்ச்சியாய்  கழிந்தது 
என் பருவ வயது 

பல கனவுகளுடன் இருந்தேன் 
கல்யாண வயதில் 

அழகானவனை எதிர்பார்க்கவில்லை 
நல்ல குணமானவனை பார்த்திருந்தேன் 

வந்தவனோ நல்ல குடிமகன் 
பிடிக்காமல் திருமண வாழ்வில் நுழைந்தேன் 

கிடைத்ததை பிடிக்க பழகிக் கொண்டேன் 
அவனின் குடியோ முற்றியது 

சந்தேக நோயும் வந்துவிட்டது 
சொல்ல முடியாத துயரங்களை 
நான் அனுபவித்தேன் 

புத்தி முத்தி போய்  சேர்ந்தான் 
இந்த உலகை விட்டு 

நான் குழந்தைகள் தெருவில் நிற்கின்றோம் 
கண்ணீருடன் வேண்டுகிறேன் மனித 
பிறவியே வேண்டாம் இறைவா.........


பாகா  

Tuesday, February 14, 2017

காதலின் அழகு

அழகு என்பது 
பார்வைகளின் மொழி அல்ல 
மனதின் உணர்வுகளை புரிந்து 
கொள்வதன் மொழி....

பாகா 


Monday, February 6, 2017

விழுந்து விட்டேன்

என் உயிரை நான் தேடுகிறேன்
அதை ஏன் உன்னுள்
ஒளித்துக்கொண்டாய்

என் மூச்சுக்காற்றை தேடுகிறேன்
அதை முழுவதும் ஏன் நீயே
நிரப்பிக்கொண்டாய்

என் நினைவுகள் அனைத்தையும்
மறந்து விட்டேன் நீ மட்டும்
ஏன் நினைவில் நிற்கிறாய்

என் இதயத்தை நீயே
திருடி விட்டு அதை ஏன் மறுபடி
தர மறுக்கிறாய்

என் நிழல் கூட உன்னையே
பின் தொடர்கிறது
ஒன்றும் புரியாமல்

என்னையும் அறியாமல்
விழுந்து விட்டேன்
உன்னிடத்தில் என்னைக்
கொடுத்து விட்டேன்.....!!

பாகா


Friday, February 3, 2017

வருவாயா

எங்கடா இருக்கிறாய்
என்று நீ இங்கே வருவாய்
எப்போது என்னுள் உன்னை கலப்பாய்

உனக்காக நானும் காத்திருக்கிறேன்
நீ என்று வருவாய் என
கண்கள் பூத்திருக்கிறேன்

வருடங்கள் பல கழிந்த பின்னும்
ஏன் இன்னும் என்னிடம் நீ
சேரவில்லை

தேசம் தாண்டி சென்றாயே
வேலைக்காகவா இல்லை
என்னை கள்ளக்காதலியாக்கும்
நிலைக்காகவா

நான் வேறு ஒருவருடன் சேர மாட்டேன்
நீ வராவிட்டால் நான் இவ்வுலகில்
வாழ மாட்டேன் என்று வருவாய் காதலா
என் கழுத்தில் மாலையிட வருவாயா
அல்ல என் மேல் மாலையிட வருவாயா .....!

பாகா 

Monday, January 30, 2017

வெளித்தோற்றம் நிலையற்றது

நீ தான் துணையென்று 
நான் உனை நம்பி வந்தேன் 
நீயோ என் மனதை பார்க்காமல் 
தோற்றத்தைக் கண்டு தள்ளி வைத்தாய் 
என் மனதில் கொள்ளி  வைத்தாய் 

வாழ்வதற்கு தேவை மனம் 
அழகு தோற்றம் அல்ல 
நீயோ அன்று என்னை விலக்கி வைத்தாய் 
என் தோற்றம் கண்டு 
இன்றோ உன் தோற்றம் 
அழகு போய்விட்டது நெருப்பில் வெந்து 
இன்றும் நான் உன்னை 
விரும்புகிறேன் உன் மனதை 

தோற்றம் அழகு நிரந்தரமல்ல 
அன்று உன்னிடம் இருந்த தோற்றம் 
இன்று இல்லை 
புரிந்து கொள்  மனமே சிறந்தது 
வெளியிலிருப்பவை நிலையற்றவை.....!

பாகா  

Friday, January 27, 2017

ஏன் என்னுள் இந்த மாற்றம்

தினம் தினம் வாழ்க்கையே கண்ணீரிலா 
தினம் தினம் அழுவதற்கே 
இந்த பிறவியா 

சந்தோச வாழ்க்கையே ஒரு கனவு தானா 
அன்றாடம் கவலைகளே தாக்கும் 
மாயம் ஏனோ 

என்னைச் சுற்றிலும் மனித இனங்கள் 
என்னைத் தொட்டுப் பார்க்க மட்டும் 
துடிக்கும் மனித இனங்கள் 

யார் என்னைப் பார்த்தாலும் 
கூசுகிறது 
அவர்கள் என்னைத் தாழ்த்திப் பேசுவது 
போலத் தோன்றுவது ஏனோ 

விலங்கினமாய் நான் பிறந்திருந்தால் 
காடுகளில் கூட்டத்தோடு நானும் வாழ்ந்திருப்பேன் 
பறவையாய் நானும் பிறந்திருந்தால் 
சுதந்திரமாய் நானும் பறந்திருப்பேன் 

மனிதனாய் என்னை ஏன் பிறக்க வைத்தாய் 
சில வித்தியாசத்தை ஏன் என்னுள் 
புகுத்தி விட்டாய்.....?!

பாகா  

Tuesday, January 24, 2017

குடிகார கணவன்

நான் உன்னை நம்பி 
உன் கைகளை பற்றிக் கொண்டு 
பல கனவுகளோடு கல்யாண 
வாழ்க்கையில் நுழைந்தேன் 

நீயும் என் கைகளை பிடித்து 
இழுக்கின்றாய் என்னை கொஞ்சுவதற்கு 
அல்ல என்னை அடித்து 
துன்புறுத்துவதற்கு 

நீ அடித்தாலும் தாங்கிக் 
கொள்கிறேன் ஆனால் நீ 
கூறும் சந்தேக வார்த்தைகள் 
எனை தினமும் கொல்கின்றன 

நான் உன் மனைவி பொறுத்துக்
கொள்வேன் நம் குழந்தைகள் 
பிற குழந்தைகளைப் பார்த்து 
பல கனவுகளுடன் வாழ்கின்றன 

ஏமாற்றி விடாதே அந்தப் பிஞ்சுகளை 
நீ திருந்தி விடுவாய் என்று 
பல முறை ஏமாந்தாலும் 
இன்னும் நம்பிக்கையுடன் இருக்கிறேன் 
நம் வாழ்வு சிறக்கும் என்று....!

பாகா 

Wednesday, January 18, 2017

கருவுற்ற தாயின் சந்தோசம்

என் செல்லமே 
உனை கருவில் சுமந்த போதே 
பல கற்பனைகளை சுமக்கிறேன் 

என் செல்லத்துக்கு 
தங்கத் தட்டில் சோறூட்டுவேன் 
வெள்ளிக் கிண்ணத்தில் பாலூட்டுவேன் 

மலடி என்ற சொல்லில் சிக்காமல் 
எனக்குத் தாய் என்ற பட்டத்தை 
கொடுத்த உனக்கு உன் உயிராய் 
என்றும் நான் இருப்பேன் 

நீ கொடுக்கும் கஷ்டங்களை 
இஷ்டமாக ஏற்றுக் கொண்டு 
உன் இஷ்டப்படி வளர்ப்பேன் 

உனை இவ்வுலகம் வியந்து 
பார்க்கும்படி பெரிய இடத்துக்கு 
கொண்டு வருவேன் என் செல்லமே 

என் வியர்வைத் துளிகளை 
உன் வாழ்வின் வெற்றிப் படிக்கட்டாக 
மாற்றுவேன்....!

பாகா  

Saturday, January 14, 2017

ஜல்லிக்கட்டு பொங்கல்

இது வரை துரோகங்கள் நம்மை சூழ்ந்து
நின்று பிரித்து விட்டன 

இன்று அதே துரோகங்கள் நம்மை சேர்த்து விட்டிருக்கின்றன

இதழ்கள் பிரிந்து வார்த்தை உருவாகலாம் 
நாம் பிரிந்தால் துரோகிகள் உருவாகலாம்

சேர்ந்து நின்று உரிமையை நாம் கலாச்சார பாரம்பரியத்தை விடாது காப்போம் 
ஒன்று சேர்ந்து போராடுவோம் 
பொங்கட்டும் அன்றும் இன்றும் என்றும் 
ஜல்லிக்கட்டு பொங்கல்...

பாகா 

Thursday, January 12, 2017

ஏர் தழுவுதல்

உனை குழந்தையாய் கண்டெடுத்து 
பிள்ளையென நான் வளர்த்து 
தெய்வமாய் உனை வணங்கி திருவிழா 
எடுக்கையிலே 

எங்கிருந்தோ வந்தார் சிலர் 
அவர்கள் பின்னால் இருப்பவர் பலர் 
உன்னை நாங்கள் அடித்தோமாம் 
துன்புறுத்தி பார்த்தோமாம்  என்று 
திருவிழாவை தடை போட்டு 
உனை வெட்டி கூறு போட்டு விற்றனர் 
வெளிநாட்டில் 

அதிகாரத்தில் இருந்தவர்களோ இருப்பவர்களோ 
ஒரு துரும்பையும் கிள்ளிப் போடாமல் 
மெத்தனமாய் இருந்து விட்டு 
மக்கள் மனதில் புரட்சி என்ற விதை போட்டு 
போராட்டம் வெடித்த உடன் 

இவ்வளவு காலத்தை வீணடித்து விட்டு 
நாடகத்தை அரங்கேற்ற நல்ல நேரம் 
பார்க்கின்றனர் 

திருவிழாவை தடை செய்ததை மனது தாங்கிக் கொள்ளும் 
பிள்ளை போல வளர்த்த உன்னை துன்புறுத்தியதாக சொல்வதை 
மனது தாங்கிக் கொள்ள முடியவில்லை 
இன்னமும்   காத்திருக்கிறோம் திருவிழாவை நடத்த 
கண்ணீருடன்....!

பாகா  

Monday, January 9, 2017

மருந்து

உன் காதல் தோல்விக்கு 
ஆறுதல் கூறத்தான் வந்தேன் 
ஒரு தோழனாய் 

ஆனால் என்னை உன் 
காதல் தோல்விக்கு மருந்தாக்கினாய் 

நட்பு என்ற வட்டத்திற்குள் 
நான் நின்றேன்  ஆனால் 
நீ வட்டத்தின் விட்டமாக என் 
மனதை தாக்கினாய் 

உன் செய்கைகள் என்னைக் 
கவர்ந்தன என்னையும் அறியாமல் 
உன்னை விரும்புகிறேன் 

நீயும் என்னை விரும்புகிறாய் 
ஆனால் ஏனோ ஒரு தயக்கத்தால் 
சொல்லாமல் கொல்கிறாய் 

நாம் வேறு வேறு மதம் என்றாலும் 
நீ கூறு உன் சம்மதத்தை 
யார் எதிர்த்து வந்தாலும் சேர்ந்து வாழலாம்....!!

பாகா 

Tuesday, January 3, 2017

புதிய உலகம்

எங்கோ விழுந்தேன் 
எங்கே விழுந்தேன் 
உந்தன் சிரிப்பைக் கண்டு 
என்னை மறந்தேன் 

என்னை உன்னுள் 
ஓளித்துக் கொண்டு 
என்னை நானே தேடிக் 
கொண்டு இருக்கிறேன் 

எதற்கு உன்னை என்னுள் ஒளித்து 
எந்தன் எடை கூட்டினாய் 

காதல் என்ற ஆட்டத்தில் 
எந்தன் கண்ணை கட்டி விட்டு 
நான் தடுமாறி நடப்பதை 
தொலைவில் நின்று ரசிக்கிறாய் 

இருவரும் நிலவுக்கு சென்றிடலாம் 
தனிமையில் நம்மை ரசித்திடலாம் 
அங்கு ஒரு புதிய உலகத்தை 
உருவாக்கிடலாம்....!

பாகா